Wednesday 24 January 2018

கேள்வி - பதில் (72)


கேள்வி

தமிழகத் தேர்தலில் ரஜினி, கமல்ஹாசன், விஷால் என்று வரிசைப் பிடிக்க ஆரம்பித்து விட்டார்களே!

பதில்

நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ நடிகர் பிரகாஷ்ராஜ் அதனைத் தான் விரும்புகிறார்! இந்த மூவரும் சேர்ந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் நாட்டு அரசியலைப் பற்றி பிரகாஷ்ராஜ் எவ்வளவு கருத்தாக இருக்கிறார் பாருங்கள். அதாவது தமிழக அரசியலை யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் விமர்சிக்கலாம் என்னும் நிலையில் தமிழகம் இருக்கிறது.  தமிழ் நாட்டின் முதலமைச்சராக தமிழரைத் தவிர யார் வேண்டுமானாலும் வரலாம் என அண்டை மாநிலத்தவர் விரும்புகின்றனர்.  அதே போல தமிழ் நாட்டில் தமிழர் அல்லாதவரும் அதனையே விரும்புகின்றனர்,

கர்நாடகாவில்,  தமிழ் நாட்டுக்குத் தண்ணீர் தரக் கூடாது என்று சமீபத்தில் கூட கொதித்தெழுந்த வாட்டாள் நாகராஜ் என்பவனைப் பற்றி பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் வாய்த் திறப்பதில்லை! ஏன், ரஜினி கூட வாய்த் திறப்பதில்லை!  ஆனால் தமிழ் நாட்டில் தமிழன் ஒருவன் ஆட்சிக்கு வருவதை பிரகாஷ்ராஜ் போன்ற கன்னடர்கள் கூட விரும்பவில்லை! தமிழ்ச் சினிமாவில் உள்ளவன் சினிமாவில் உள்ளவனை விரும்பினால் நமக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் அவன்  தமிழனாக இருக்கக்கூடாது என்பதில் தான் இவ்ர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்! 

பிரகாஷ்ராஜ் ரஜினியின் ஆதரவாளர், அவர் ரஜினியை ஆதரிப்பது கன்னடர் என்பதால் மட்டும் அல்ல தமிழ் நாட்டில் அவர் நல்ல செல்வாக்கு உள்ள நபர் என்பதை அறிந்து தான் ரஜினி பதவிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். விஷாலுக்கு அரசியலில் ஆதரவு இல்லை என்பது பிரகாஷ்ராஜுக்குத் தெரியும். அதே போல கமல்ஹாசன் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு ரஜினிக்கு மிரட்டலான நபராக இல்லை. இவற்றையெல்லாம் மனதில்  வைத்துத் தான் பிரகாஷ்ராஜ், ரஜினி பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக தனது அரசியல் விமர்சனத்தை ஆரம்பித்திருக்கிறார்.

எது எப்படியிருப்பினும் வருகின்ற தேர்தலில் சினிமா நடிகர்கள் தமிழக அரசியலில் பேர் போட முடியாது என்பதே உண்மை. தமிழன் சினிமாவில் தனது தலைவனைத் தேடுகிறான் என்பது ஓரளவு உண்மை தான் என்றாலும் மிச்சம் மீதி இருக்கின்ற மூன்று நான்கு ஆண்டுகளில் இந்தக் கருத்து தவிடுபொடி ஆகிவிடும் என்று நாம் நம்பலாம்!

வாழ்க தமிழினம்!




No comments:

Post a Comment