Thursday 11 January 2018

இனி குடிநுழுவுத்துறையும் பள்ளிகள் நடத்தலாம்!


 நமது நாட்டில்  இனி பள்ளிக்கூடங்கள் யார் வேண்டுமானாலும் நடத்தலாம்! நமக்குத் தெரிந்த வரை ஆளுங்கட்சியான அம்னோ, இஸ்லாமிய இயக்கமான ஜாக்கிம் இவர்களோடு இப்போது குடிநுழுவுத் துறையும் சேர்ந்து கொண்டது!

குழைந்தைகளுக்குக் கல்வி என்பது எவ்வளவு முக்கியம்? "இளமையிற் கல்" என்பது ஒளவையாரின் அமுத வாக்கு. அது மற்றவர்களுக்கும் புரியவேண்டும் என்பது அவசியமல்ல. நிச்சயமாக நமது கல்வி அமைச்சுக்குத் தெரியக் கூடாது. 

ஆனால் இது குழந்தைகளின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்பது கல்வி அமைச்சுக்குத் தெரியும். காரணம் முழந்தைகளுக்கானக் கல்வி என்பது அவர்களின் உரிமை. அதனை ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அவர்களிடமிருந்து பறிக்க முடியாது. அதுவும் குறிப்பாக மலேசியா அதனைச் செய்ய முடியாது. காரணம் சர்வதேச ரீதியில் குழந்தைகளுக்கானக் கல்வி சம்பந்தமான ஒப்பந்தத்தில் மலேசியாவும் கையொப்பமிட்டிருக்கிறது. இப்போது எந்தச் சட்டத்தையும் மீறலாம் என்னும் நிலை இருப்பதால் நமது உரிமைக்காக ஒன்று அம்னோவிடம் போக வேண்டும் அல்லது ஜாக்கிமிடம் போக வேண்டும்!  மேலும் குழந்தைகளின் கல்வி பற்றியான சட்டதிட்டங்கள் எதனையும் கல்வி அமைச்சோ, குடிநுழைவுத் துறையோ, தலைமை ஆசிரியர்களோ அறிந்திருக்கவில்லை என்பது தான் நமக்குள்ள சோகம்.

இவ்வளவுக்கும் காரணம் சிரம்பானைச் சேர்ந்த டர்ஷனா என்னும் குழந்தை. டர்ஷனாவை தத்து எடுத்த பெற்றோர்களான கணேசன் - மல்லிகா முறையாகச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து விட்டார்கள். ஆனாலும் அரசாங்கத் தரப்பிலிருந்து இன்னும் முறையான பதிலை அவர்கள் பெறவில்லை. அதனால் அந்தக் குழந்தை பள்ளி போக முடியாத நிலை. அரசாங்க இலாகாக்கள் தங்களது கடமையை இழுத்தடிப்பதால் இது போன்றே பல குழைந்தகள் இன்னும் இருக்கவே செய்வார்கள்.

ஆனாலும் கடைசியாக கிடைத்த செய்தியின் படி அந்தக் குழந்தைக்குப் பள்ளியில் சேர அனுமதி கிடைத்து விட்டதாம்.

 கல்வியில் சிறந்து விளங்க டர்ஷனாவுக்கு நமது வாழ்த்துகள்! 


No comments:

Post a Comment