வீட்டு வாடகை செலுத்தாவிட்டால் என்ன நடக்கும்?
வீடு காலி செய்ய வேண்டி வரும். விட்டிலுள்ள பொருட்கள் அனைத்தும் நடுரோட்டுக்கு வரும். இதெல்லாம் தெரிந்து தான் நாம் வாடகை வீடுகளில் வசிக்கிறோம். வாடகைக்கு விடுபவர்களை வள்ளல்களாக நினைத்தால் அது அவர்களது குற்றமல்ல.
அதனால் தான் ஒருவர் சொன்னார்: உன் தலைக்கு மேல் கூரை இருக்குமானால் நீ கோடிஸ்வரன் என்று. ஆமாம், அந்த கூரை உனக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். கொஞ்சம் ஓட்டை உடைசலாக இருந்தாலும் அது உன் கூரை. உன் சொந்தம். நீ அங்கு தாராளமாக அங்குக் குடியிருக்கலாம். யாரும் உன்னைக் காலி செய்யச் சொல்லமாட்டார்கள். நேரம் வரும் போது, உன் கையில் பணம் வரும்போது நீ அதனை அரண்மனையாக மாற்றிவிடலாம்!
இப்போது சமீபகாலமாக நமது மக்களுக்குச் சோதனையான காலம் என்று தான் சொல்ல வேண்டும். வேலைகள் குறைந்து வருகின்றன. இன்னும் பல தொழிசாலைகள் மூடுவிழா கண்ட நிலையிலேயே இருக்கின்றன. தொழிற்சாலைகள் திறக்கப்பட்டால் தான் அவர்கள் மீண்டும் வேலைக்குப் போக முடியும் என்கிற சூழல். ஏதோ வீட்டில் மனைவி வேலை செய்தால் கொஞ்சம் சமாளிக்கலாம்.
ஒன்று மட்டும் நமக்குப் புரியவில்லை. இங்கு வேலை இல்லை என்று சொல்லி நமது மக்களில் பலர் சிங்கப்பூர் போகிறார்களாம். அங்கு மட்டும் எப்படி வேலை வாய்ப்புக்களை உருவாக்குகிறார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. நாம் எங்கே குறைந்துபோனோம் என்பதும் புரியவில்லை.
நமது அரசியல்வாதிகள் ஏதும் நாச வேலைகளில் ஈடுபடுகிறார்களா? மக்களின் நலன் தான் அரசுக்கு முக்கியம். நம் நாட்டின் நிலைமை இந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போனது ஏன்? இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் நம்மைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்குப் போய்விட்டன என்று சொல்லப்படுகின்றது.`
நமது இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்குப் போய் சிக்கல்களில் மாட்டிக் கொள்கின்றனர். விளம்பரத்தை நம்பி ஏமாந்து போகின்றனர். எப்படிப் பார்த்தாலும் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமை.
நம் நாட்டில் பல இந்திய குடும்பங்கள் வேலை இல்லாமல் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். வேலை இல்லை, வீடு இல்லை அப்படி என்றால் சாப்பாடும் இல்லை.
குடுமபத் தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. குடித்து கும்மாளம் அடிக்க வேண்டும் என்று நினைத்தால் குடும்பம் தெருவுக்குத் தான் வரும்.
No comments:
Post a Comment