நண்பர்களே!
புத்தாண்டு வாழ்த்துகள்!
வலைப்பதிவை இப்போது தான் ஆரம்பித்திருக்கிறேன். நான் புதியவன். இன்னும் சரியாகப் பிடிபடவில்லை! குழந்தை எப்படித் தத்தித்தத்தி நடக்குமோ அந்த நிலையில் உள்ளேன். கணனி அறிவு மகாக்குறைவு. ஆசையோ அதிகம். அதாவது எழுத வேண்டும் என்னும் ஆசையோ அதிகம்.
தனியாக வலைப்பதிவு உள்ளோர் பலர் இணையத்தில் உள்ளனர். அவர்கள் உதவியை இந்த நேரத்தில் நாடுகிறேன். எனக்கும் கொஞ்சம் கை கொடுங்கள்!
உண்மையைச் சொன்னால் கடந்த நான்கு நாட்களாக எப்படி ஆரம்பிப்பது, எங்கே தொடங்குவது என்று ஒன்றும் புரியாமல் தட்டுத்தடுமாறி இப்போது தான் ஒரு பள்ளி மாணவனின் துணையோடு இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இந்த 2016-ம் ஆண்டில் இணையத்தில் இணைந்து விட்டேன். இனி பின்வாங்குவதாக இல்லை!
மீண்டும் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!
நண்பன்
கோடிசுவரன்
No comments:
Post a Comment