Saturday, 10 December 2016

கேள்வி - பதில் (35)


கேள்வி

ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருக்கிறதா?

பதில்

அப்படித்தான் தோன்றுகிறது. பல்வேறு செய்திகள் நம்மைக் குழப்புகின்றன. ஆனாலும் அவை அனைத்தும் பொய் என்று நாம் ஒதுக்கிவிட முடியாது.

உண்மையில் நடந்தது என்ன என்பது சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அப்பல்லோவின் மருத்துவர்களுக்கும் தான் தெரியும்.

ஆனால் அப்பல்லோ மருத்துவமனை அவர் டிசம்பர், 5, இரவு மணி 11.30 க்குக் காலமானார் என்னும் அறிவிப்போடு முடித்துக் கொண்டது.

இப்போது அவர் சாவில் மர்மம் இருப்பதாகப் பலவாறாகப் பேசப்படுகிறது. இக்குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சசிகலாவின் பக்கமே சுட்டிக்காட்டப் படுகிறது. ஆனால் அவர் அதனைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை! அப்பொல்லோ என்ன சொன்னதோ அது தான் அவரின் நிலைப்பாடு. அதற்கு மேல் அவர் வாய் திறப்பார் என்று நாம் எதிர்பார்க்க முடியாது! திறந்தால் அவருக்கத்தான் பிரச்சனை! அதனால் அவர் அ.தி.மு.க. வை  தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சியில் தனது கவனத்தை திருப்பிக் கொண்டார்!

பலர் பலவகையான சந்தேகங்களை எழுப்பியது போல என்னிடமும் ஒரு சந்தேகம் உள்ளது. எல்லாச் சந்தேகங்களோடு இதனையும் சேர்த்துக் கொள்ளட்டுமே என்று நானும் இதனை இங்கு வெளியிடுகிறேன். இது சரியா, , தவறா என்று என்னால் சொல்ல முடியாது.

ஜெயா தொலைகாட்சியில்  ஒவ்வொரு நாள் காலையிலும் இந்திய நேரம் 6.00 - 7.00 வரை நாகப்பட்டினத்திலிருந்து வேளாங்கண்ணி மாதா வழிபாடு நேரடி ஒளிபரப்பாக நடைபெறும். இது எங்கள் குடும்பத்தினர் தினசரி பார்க்கின்ற நிகழ்ச்சி. இது ஒரு கட்டண நிகழ்ச்சி.  அதனால் எந்தத் தடையுமில்லாமல் தினசரி நடைபெறும் நிகழ்ச்சி. ஜெயலலிதா இறந்த அடுத்த நாள் காலை - அதாவது 6-ம் தேதி காலை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. அது மரியாதை நிமித்தம் ஒளிபரப்பாகவில்லை எனலாம். அது நமக்குப் புரிகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சி அவர் இறந்த அன்று காலையே (5-12-2016)ஒளிபரப்பாகவில்லை. அது ஏன் என்பதே எனது கேள்வி? அன்று காலை அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை என அறிந்ததும் நான் அவர் இறந்து விட்டதாகவே நினைத்துக் கொண்டேன். வேறு மாதிரி நினைக்கத் தோன்றவில்லை! அவர் இறக்கவில்லையென்றால் அது ஏன் ஒளிபரப்பாகவில்லை என்னும் கேள்வி தொக்கி நிற்கிறது.

அப்படியென்றால் உண்மையில் அவர் எப்போது தான் இறந்தார்?

அனைத்தும் மர்மம், மர்மம் தான்!

No comments:

Post a Comment