Thursday 15 December 2016

தொழிலதிபர் அஜய் ஒரு முன்னோடி!




காலை நேரத்தில் நல்லதொரு செய்தியைப் படிக்க நேர்ந்தது.

மும்பையைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் பாராட்டும்படியான ஒரு செயலைச் செய்திருக்கிறார்.

நல்லதைச் செய்பவர்களை நாம் பாராட்ட வேண்டும். பராட்டுவதில் கஞ்சத்தனம் வேண்டாம். நல்லதைச் செய்பவர்களை நாம் முடக்கிவிடக் கூடாது!

அஜய் முனோட் என்னும் அந்தத் தொழிலதிபர் தனது மகளின் திருமணத்திற்காக செலவு செய்ய வேண்டிய பணத்தில் ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார். அது தான் அந்தச் செய்தி.

மகளின் திருமணத்திற்காக அவர் செய்ய வேண்டிய செலவு சுமார் எண்பது இலட்சம். அதுவே அவர் மகளின் திருமணத்திற்கான அவரின் செலவுத் திட்டப்பட்டியல்.

ஆனால் அத்தனையையும் ஒரு நொடியில் மாற்றிவிட்டார் அஜய். அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் சேர்ந்து அவரது மகளின் திருமணத்தின் போது ஏதாவது நல்லதொரு செயலைச் செய்யலாமே என்னும் கருத்தைச் சொல்ல அதனையே ஏற்றுக்கொண்டார் அஜய்.

என்றென்றும் அவரது மகளின் பெயரைச் சொல்லும்படியாக சுமார் 90 வீடுகளை ஏழைகளுக்கு அன்பளிப்பு செய்திருக்கிறார் அஜய்.

நாம் அவரை வாழ்த்துகிறோம்! அவரது மகளையும் நீடுழி வாழ வாழ்த்துகிறோம். மகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இது நடக்கக்கூடிய சாத்தியமில்லை!  கோடீஸ்வர வீட்டுப்பிள்ளைகள் அப்படியெல்லாம் எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு வீட்டுப்பிள்ளையும்  தனது  திருமணத்திற்கு எத்தனை கோடி செலவு செய்தார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பந்தயம் மாதிரி!

 அவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய  நம்முடைய வாழ்த்துகள்!

No comments:

Post a Comment