Sunday 18 December 2016

கேள்வி-பதில் (39)

கேள்வி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை இரும்புப் பெண்மணி  என்று சொல்லுகிறார்களே, சரியா?

பதில்

நமக்குத் தெரிந்த இரும்புப் பெண்மணிகள் இருவர். ஒருவர் பிரிட்டனின்  மார்கரெட் தாட்சர் மற்றறொருவர் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி.

இந்த இரண்டு இரும்புப் பெண்மணிகளோடு ஜெயலலிதாவை ஒப்பிட முடியமா என்பது எனக்குத் தெரியவில்லை. பிரதமர் தாட்சர் நாட்டில் ஏற்பட்ட கலவரங்களை அடக்கி பொருளாதார சீர்திருத்ததைக் கொண்டு வந்தார். இந்திரா காந்தி வங்காள தேசம் என்னும் ஒரு புதிய நாட்டையே உருவாக்கினார்.

ஜெயலலிதா,  ஈழத்திற்கு ஒரு விடிவைக் கொண்டு வந்திருந்தால் ஒரு வேளை அவரை  ஒரு இரும்புப் பெண்மணி என்று நாமும் தாராளாமாகக் கூறலாம்.

அவருடைய அரசியல் பார்வையே வேறு. இளம் வயதில் ஆண்கள் மீது அவருக்கு ஏற்பட்ட சங்கடங்களை வேறு வகையில் பழி தீர்த்துக் கொண்டார். தனது ஆட்சி காலத்தில் ஆண்களைக் காலில் விழ வைத்து 'அழகு' பார்த்தவர் அவர். அவருடைய கார் டையர்களை  வணங்குவதும், அவர் மிதித்த மண்ணைத்  தொட்டு வணங்குவதும் - இவைகள் எல்லாம் ஏதோ புரட்சி என்பதாக அவருடைய தொண்டர்கள் நினைக்கலாம். நாம் அப்படி நினைக்க முடியுமா?

அவர் ஏழைபாழைகளை அரசியலுக்குக் கொண்டு வந்தார் என்பதற்குக் காரணங்கள் உள்ளன.  பணக்காரன் காலில் விழமாட்டான். ஏழை என்றால் தான் சொல்லுவதைக் கேட்பான். காலிலும் விழுவான்.    ஏழைகளை அரசியலுக்குக் கொண்டு வந்ததில் தவறில்லை. ஆனால் அவரவர் தொகுதிகளில் அவர்களைத் தாராளாமாக பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிக்க வைத்து கொள்ளைக்காரர்களாக மாற்றினாரே, அதை அவர்கள் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளலாம் , நாம் எப்படி ஏற்றுக் கொள்ளுவது?

ஊகூம்....! அவர் அரசியல்வாதியே அல்ல..! இரும்புப் பெண்மணியும் அல்ல!.

No comments:

Post a Comment