Wednesday 21 December 2016

ஏன் தண்ணிர் தட்டுப்பாடு?

நம் நாட்டில் தண்ணீர் தட்டுப்ட்டிலும் சமயம் புகுந்து விடுகிறதோ என்னும் சந்தேகம் நமக்கு வலுக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பெருநாள் காலங்களில் தண்ணிர் தட்டுப்பாடு வந்துவிடுகிறது!

தீபாவாளி வருகிற போது தண்ணீர் தட்டுப்பாடு வந்து விடுகிறது. கிறிஸ்துமஸ் பெருநாள் வருகின்ற போது தண்ணீர் தட்டுப்பாடு வந்து விடுகிறது.

நாடு முழுவதும் இல்லையென்றாலும் ஆங்காங்கே ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் அதை எப்படி - என்னவென்று சொல்லுவது?

அரசாங்கம் தான் இதனைச் செய்கிறது என்று நாம் சொல்லவில்லை. ஆனால் அரசாங்கத்தின் மீது தான்  பழி போகிறது என்பதைத் தான் நாம் சொல்ல வருகிறோம்.




பலரின் முணுமுணுப்புக்களை இது போன்ற காலங்களில் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம்.

"தீபாவளி வந்தாதான் தண்ணீர் தட்டுப்பாடு வரும்! இதுவரை சும்மா இருந்துவிட்டு இப்ப தான் எல்லா வேலையும் செய்வானுங்க!" என்று நாமே பல முறை முணுமுணுத்திருக்கிறோம்.

ஒரு உண்மையை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது ஏன் - குறிப்பாக விழா காலங்களில் மின்சார வாரியம் தனது பழுது பார்க்கும் வேலையையோ அல்லது சுத்திகரிப்பு வேலையையோ அல்லது சீரமைப்பு வேலைகளைச் செய்வது ஏன்? அதுவும் குறிப்பாகத் தீபாவளி, கிறிஸ்துமஸ் காலங்களில்?

விடுமுறைக் காலங்களில் வேலை செய்தால் மூன்று மடங்கு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்னும் காரணமாயிருக்குமோ? நமக்குத் தெரியவில்லை!  பண்டிகை நாள்கள் இல்லாத காலங்களில் இந்த வேலைகளைச் செய்யலாம். மக்களுக்குப் பிரச்சனைகள் இல்லாத காலங்களில் வேலைகளைச் செய்யலாம்.  ஒவ்வொரு ஆண்டும் தங்களது திட்டமிடும் பணிகளை அப்படித்தான் செய்ய வேண்டும். அவர்கள் திட்டமிடல் அப்படித்தான் அமைய வேண்டும்.
மக்களுக்கு இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும்.


ஒரு நல்ல செய்தியும் நமக்குக் கிடைத்திருக்கிறது. இனி விழாக்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நிகழாது என தேசியத் தண்ணீர் சேவையின் ஆணையத் தலைவர் டத்தோ லியாங் உறுதி அளித்திருக்கிறர். நாம் அதனை வர வேற்கிறோம்!

No comments:

Post a Comment