Friday, 24 March 2017
எழுபது வயதிலும் கல்வி கற்கலாம்!
கல்வி கற்பது என்பது எந்த வயதிலும் நடக்கலாம். இளமையிற் கல் என்பது முது மொழி. அந்த வாய்ப்பு இல்லாவிட்டால் முதுமையிலும் கல்வி கற்கலாம்.அவ்வளவு தான்!
இந்தியா, குஜராத் மாநிலத்தில் இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார் ஒரு மனிதர். அவர் தான் 70 வயது பெரியவரான பார்வட் மக்வானா.
இளமையில் தவறவிட்டக் கல்வியை இப்போது தொடர்கிறார். பத்தாம் வகுப்புப் பரிட்சையும் எழுதுகிறார்!
மக்வானாவுக்கு ஏழு பிள்ளைகள். அனைவரும் உயர் கல்வி கற்றவர்கள்.நல்ல நிலையில் இருக்கின்றவர்கள்.
கல்வியறிவில்லாத தனது நூறு வயது தாயார் தான் தனக்கு உந்துசக்தியாக இருந்து இப்போது பரிட்சையும் எழுத வைத்திருக்கிறார் என்கிறார் மக்வானா.
அவரது தாயார் பாராட்டுக்குறியவர். தனது மகனின் கல்வியில் இந்த வயதிலும் அவர் அக்கறை காட்டியிருக்கிறாரே மிகவும் போற்றுதலுக்குரிய அன்னை!
இப்போது பரிட்சையில் தேர்ச்சி பெற்று .....என்ன செய்யப் போகிறீர்கள்..? அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்கும் தனக்கு முறையான கல்வியில் மூலம் இன்னும் சிறப்பான முறையில் தனது கிராம மக்களுக்குச் சேவை செய்ய முடியும் என நம்புகிறார் மக்வானா.
பிச்சை புகினும் கற்கை நன்றே என்று சொன்னார் ஆன்றோர். சேவை செய்யினும் கற்கை நன்றே.என்கிறார் மக்வானா!
வாழ்த்துகள்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment