Wednesday 15 March 2017

பழங்களின் அரசன் MUSANG KING!


பழங்களின் அரசன் என்றால் யாராக இருக்க முடியும், நம்ம ஊர் டுரியானைத் தவிர?

தமிழிலே அதனை முள்நாறிப் பழம் என்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதுவும் சரி தான். வெளியே முள். அதன் வாசமோ புதிதாகப் பார்ப்போருக்கு ஒரு வித நாற்றம் போலத் தோன்றும். ஆனால் பழகிபோன நமக்கு அதன் வாசமே நம்மை 'வா! வா!' என்று அழைக்கும்! அதனை நாற்றமாக நாம் என்றுமே பர்த்ததில்லை!

டுரியான் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை தான் அதன் பருவகாலம். ஆனால் இவ்வாண்டு மார்ச் மாதமே அதன் அறுவடை காலம் தொடங்கி, டுரியான் பிரியர்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது!

இப்போதைக்கு அதனை ருசி பார்க்க வேண்டும் என நினப்போர் நமது பகாங் மாநிலம் ரவூப் பக்கம் போக வேண்டும். வெகு சீக்கிரத்தில் மற்ற மாநிலங்களிலும் எதிர்பார்க்கலாம்.



ஆனாலும் இந்த அரசனுக்கு அரசன் பழத்தை நாம் அனைவருமே சுவைப்போம் என்று சொல்லுவதற்கில்லை! காரணம் அதன் விலை அப்படி!  ஒரு கிலோ 50 வெள்ளியிலிருந்து 60 வெள்ளி வரை விற்கப்படுகிறது. ஆனால் பாதகமில்லை. ஏதோ ஆசைக்கு வேண்டுமானால் ஒன்றோ இரண்டோ வாங்கிச் சாப்பிடலாம்.   அதே சமயத்தில் இந்த வகைப் பழங்களும் எல்லா இடங்களிலும் விற்கப்படுவதுமில்லை! அதன் சந்தை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தான்.

ஆனால் மற்ற வகை டுரியான்கள் எல்லா மூலை முடுக்குகளிலும்  கிடைக்கும். நமது உள்ளூர் பழங்களோடு தாய்லாந்து பழங்களும் சேர்ந்து கொள்ளுகின்றன! விலைகள் ஏற்றுக் கொள்ளலாம் ரகம்!..

நமது ஊர் டுரியான் பழங்களுக்குச் சிங்கப்புர், புருணை போன்ற நாடுகளில் ஏகப்பட்ட கிராக்கி! அதனால் ஏற்றுமதியும் பிரகாசமாக இருக்கிறது.

ஒரு முறை நான்  தமிழ் நாடு, ஊட்டிக்குச் சென்றிருந்தபோது இந்த டுரியான் பழத்தை  அங்குப் பார்த்து ஆச்சரியமடைந்தேன். நமக்குத் தெரியாத சில ரகசியங்களை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மகப்பேறு இல்லாதவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் மகப்பேறு உண்டாகும்  என்பதாக அவர்கள் நம்புகிறார்கள்!  நம்பிக்கை தானே வாழ்க்கை, இருக்கட்டும்!

பழங்களின் அரசன் தான்! ஆனால் இனிப்பு நீருக்கும் அரசன் என்பதையும் மறந்து விடாதீர்கள்!

பழங்களின் அரசன் MUSANG KING!





No comments:

Post a Comment