புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கிறாகள் சிலர்!
ஆமாம்! பத்து நாடாளுமன்ற உறுப்பினர், பிரபாகரனின் கல்வித் தகுதி என்ன என்பது பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியிருக்கின்றனர்! கல்வித்தகுதி பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் அவரது தொகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அவரை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.
அவரும் ஒரு தவணையை முழுமையாக முடித்துவிட்டு அடுத்த தவணையும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஏன் இந்த ஆராய்ச்சி?
சமீபகாலமாக பிரபாகரனின் பெயரைக் கெடுக்கும் வேலையில் ம.இ.கா.வினர் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது அவர்களின் நடவடிக்கைகளிருந்தே தெரிந்து கொள்ளலாம். கோவில் பிரச்சனை ஒன்றில் எந்தவித அக்கறையும் காட்டாமல் பத்து ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடித்துவிட்டு, பிரபாகரன் தலையிட்டு அதனை முடித்துவைக்கும் தருவாயில், உள்ளே புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் தான் ம.இ.கா.வினர். பிரபாகரனுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் மிகத்தீவிரமாக அவர்கள் இருக்கின்றனர்!
இந்தக் 'கல்வித்தகுதி' யின் பின்னால் ஒளிந்து கொண்டு இருப்பவர்கள் யார் என்று நம்மாலும் எளிதில் அனுமானிக்க முடியும். அவர் கல்வித்தகுதி குறைவானவர் என்று சொன்னால் அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டியவர்கள் ம.இ.கா.வினர். ஆமாம் அறுபது ஆண்டு கால ஆட்சி என்றால் சும்மாவா? குண்டர்களின் தலைமத்துவத்தில் குண்டர் கும்பல்களைத் தானே உருவாக்க முடியும்? கல்வியாளர்களையா உருவாக்க முடியும்? இன்று சிறையிலிருக்கும் அதிகப்பட்சமான 15% இந்திய இளைஞர்கள் எல்லாம் அவர்களின் உருவாக்கம் தானே!
இதுவே படித்த தலைமைத்துவம் என்றால் நமது நிலை இப்படியா இருக்கும்? ஆனால் என்ன செய்வது? படித்தவர்களை நாம் மதிப்பதில்லையே! அதற்கான பலனை அனுபவிக்கத்தான் வேண்டும்.
நமது சமுதாயத்தில் படிக்காதவர்கள் இல்லை என்றால் அப்படி ஒரு நிலையை உருவாக்கியதில் பெரும்பங்கு ம.இ.கா.வுக்குத் தான்! அது தான் உண்மை. அரசியலை இந்தியர்களின் அழிவுக்குப் பயன்படுத்தியபவர்கள் அவர்கள்.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் இவர்கள்? பார்ப்போம்!
No comments:
Post a Comment