Sunday 9 October 2016

கேள்வி - பதில் (32)


கேள்வி

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை நிலவரம் தெரிய வாய்ப்பே இல்லையா?

பதில்

இன்றைய அவர் நிலையை நினைத்தால் பரிதாபப்படத் தான் வேண்டியிருக்கிறது.  எத்தனையோ சட்டமன்ற உறுப்பினர்களைக்  காலில் விழவைத்து வேடிக்கைப் பார்த்தவர்  இன்று   யார் காலிலோ அவர் விழுந்து கிடக்கும்  நிலமை!

அத்தோடு மட்டும் அல்ல!  அவர் என்ன நிலையில் இருக்கிறார், உண்மையில் தேறி வருகிறாரா அல்லது ஆளே இருக்கிறாரா, இல்லையா என்பது கூட யாராலும் தெரிந்து கொள்ள முடியவில்லை! இந்த  அளவுக்கு இதில் என்ன ரகசியம் வேண்டியிருக்கிறது  என்பது நமக்கும் புரியவில்லை!

இந்த ரகசியத்தினால் யாருக்கு என்ன பயன் என்பதும் நமக்குத் தெரியவில்லை! ஏதோ அரசியல் விளையாட்டு நடக்கிறது என்பது தெரிகிறது. இதில் கோடிக்கணக்கில் பணம் கைமாறுகிறது என்று சொல்லப்படுகிறது!

இந்த அளவுக்கு அரசியல் விளையாட்டுக்கள் நடக்கிறது என்றால் அம்மாவின் நிலை சரியில்லை  அவர் மீண்டும் அரசியல் நடத்த வழியில்லை என்பது தான் பொருள்!  அவரைப் பார்த்து இனி யாரும் பயப்படப்போவதில்லை!

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர்.க்கு ஜெயலலிதா என்ன செய்தாரோ அதுவே இன்று அவரைத் திருப்பித் தாக்குகிறது!  இதைத்தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பர். பூனைகளுக்கு இப்போது தான் காலம் வந்திருக்கிறது! இது  பூனை,  யானையை ஏறி மிதிக்கும் காலம்!  இனி வரும் நாள்களில் இந்த நாடகங்கள் எல்லாம் நடக்கும்!

சசிகலா குடும்பத்தினர் இந்த அளவுக்கு முதல்வரை அடக்கி ஆள்வது என்பது நாம் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. ஜெயலலிதாவை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள்  இப்போது அவருக்கே எமனாகி விட்டனர்.

இனி தமிழக முதல்வருக்கு என்ன நடந்தாலும் அதற்கான பொறுப்பை சசிகலாவே ஏற்க வேண்டும். ஒரு முதல்வரை சிறைப் பிடித்து வைத்திருப்பது என்பதே தவறானது. இதில் அப்போலோவும் சம்பந்தப்பட்டிருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

முதல்வரைப் பற்றியான உண்மைச் செய்திகள் வெளியாகாத நிலையில் இப்போது பல வகையான ஊகங்கள் வெளியாவது இயற்கையே! இப்போதே, அவர் இன்னும் உயிரோடு இருக்கும் போதே, அவரைப்பற்றி வாழ்க்கை வரலாறு எல்லாம் யுடீயுப்பில் வெளியாக ஆரம்பித்துவிட்டன!

இப்போதைக்கு முதல்வரை வைத்து பணம் பண்ணுபவர்கள் சசிகலா குடும்பத்தினர் என்பது மட்டும் தெரிகிறது! அரசியல் பேரம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்!

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உண்மை நிலை எப்போது தெரியும் என்பது இப்போது தெரியவில்லை!


No comments:

Post a Comment