Friday 7 October 2016

முதல்வர் ஜேவுக்கு ஏன் இந்த நிலைமை?


மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது முதல்வர் ஜெயலலிதாவின் நிலைமை. தமிழக அரசியலில் ஒரே ஆண் மகன் அவர் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் செயல்பட்டார்.

இன்று அவர் 'பாவம்' என்று சொல்லுகிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அவரிடம் எடுபிடியாக இருந்தவர்கள் இன்று அவரைக் கொடுக்குப்பிடியாக சிறை வைத்திருக்கின்றனர் என்று தான் நினைக்க வேண்டியிருக்கிறது!

முதல்வரின் நிலைமை எப்படியிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை! ஆளுநர், தலைமைச் செயலாளர்  இன்னும் யார் யாரோ வருகிறார்கள், போகிறார்களே தவிர அவரை பார்க்க அனுமதி மறுக்கப்படுகின்றது! அனுமதிக்கப்படுவதில்லை!  ஏன் அவருடைய அண்ணன் மகள் - லண்டனிலிருந்து வந்தவர் - அவருக்குக் கூட அனுமதியில்லை!

முதல்வரின் நெருங்கிய தோழி, சசிகலாவின் குடும்பம் தான் இன்றைய நிலையில் முதல்வரின் நிலையைப் பற்றி  அறிந்தவர்கள். ஆளுநரோ, தலைமைச்செயலாளரோ  முதல்வரைச் சந்தித்தார் என்பதற்கான எந்த அடையளாமும் இல்லை!  எல்லாம் வெறும் வெற்று அறிவிப்போடு சரி!

முதல்வர் தங்கி சிகிச்சை பெறும் அப்பொல்லொ மருத்துவனமனையின் முற்றிழுமாக ஒரு பகுதியை சசிகலாவின் குடும்பத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன!

இது போன்ற இறுக்கமான ஒரு சூழ்நிலையில் ஊடகங்கள் பலவித ஊகங்களாக  செய்திகளை வெளியிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது!

யாருமே முதல்வரைப் பார்க்க அனுமதி இல்லை என்றால் ஊடகங்களில் பரவலாக பரவிக் கொண்டிருக்கும் செய்திகள் அனைத்தும் உண்மை என்றே நினைக்க வேண்டியுள்ளது.

முதல்வர் உயிரோடு போராடிக் கொண்டிருக்கிறார் அல்லது அவரைப் பார்ப்பவர்களுக்கு அவருடைய நோய் தொற்றிக் கொள்ளும் என்று இப்படியாகத் தான் சராசரியாக நாம் கணிக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் ஏன் இந்த கெடுபிடி?

சமூக ஆர்வலரான டிராஃபிக் ராமசாமி சொல்லுவதை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். முதல்வருக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்தால் சசிகலாவை சிறையில்  தள்ளுவேன் என்று அவர் சொல்லுவது சரியே! சசிகலாவும் அவர் குடும்பத்தினரும்  தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலாவின் செமப்பிடியில் சிக்கி இருக்கிறார் என்று தான் தோன்றுகிறது!

அன்று எம்.ஜி.ஆர்! இன்று ஜெயலலிதா!

No comments:

Post a Comment