Friday 14 October 2016

நூடல்ஸோ... நூடல்ஸ்..!


நூடல்ஸ் என்னும் வார்த்தையே நமக்குப் புதிது! நமது தமிழ்த் திரைப்படங்கள் இந்த வார்த்தையை நன்கு பிரபலப்படுத்தி விட்டன! இப்போது தமிழகத் தொலைக்காட்சி விளம்பரங்கள்  இன்னும் அதிகமாகப் பிரபலப்படுத்தி வருகின்றன!

நமது  நாட்டில் அதனை "மீ" என்கிறோம். அது ஒரு சீன மொழிச் சொல் என்பது மறந்து போய் அதனை ஆங்கிலச் சொல்லாகவே நினைத்து நாம் பயன்படுத்தி  வருகிறோம்! காரணம் நாம் பிறந்த காலத்திலிருந்தே - ஏன் அதற்கு முன்பே - நம்மோடு பயணித்து வருகிறது இந்த "மீ"! அது சீனர்களின் உணவு என்பதால் சீனர்கள் எங்கிருந்தாலும் இந்த "மீ" யும் வந்து விடும்!

இந்த "மீ" வகைகளில் பலதரப்பட்டவை உள்ளன. சிறிய வகை, பெரிய வகை, மீஹூன் வகை, கொய்த்தியோ மீ, லக்சா மீ  இன்னும் பலவகை. உணவு விரும்பிகளிடம் கேட்டால் இன்னும் அதிகம் சொல்லுவர்கள்!

இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒன்று தான். தமிழகத் தொலைக்காட்சிகளில் வருகிற விளம்பரங்களைப் பார்க்கும் போது நமக்குத் தலையே சுற்றகிறது! அந்த அளவுக்கு விளம்பரங்கள்! அத்தோடு மட்டுமா?  அது ஏதோ பணக்கார உணவு போன்ற ஒரு தோற்றத்தை இந்த விளம்பரங்கள் ஏற்படுத்துகின்றன!

உண்மையில் இது பணக்காரர்களின்  உணவா? அல்லது நடுத்தரக் குடும்பங்களின் உணவா?  பணக்காரர்கள் பொட்டலங்களில்  வரும் இந்த மீ வகைகளைச் சாப்பிடுவதில்லை! நடுத்தரக் குடும்பங்கள் ஆபத்து, அவசர வேளைகளில் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள!  பொதுவாக கல்லுரி மாணவர்கள், தனித்து வாழ்பவர்கள், ஏழைகள் - இவர்கள் போன்றவர்கள் தான் இதன் முக்கிய பயனீட்டாளர்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்த நூடல்ஸ் இப்படிப் பொட்டலங்களில் வந்த ஆரம்பக் காலத்தில் அவைகளைப் பற்றி பல விமர்சசனங்கள் எழுந்தன.. அனைத்தும் எதிர்மறையான விமர்சனங்கள். இப்போதும் நமது நோக்கில் அந்த விமர்சனங்கள் அப்படியே தான் இருக்கின்றன!  ஏதோ இடை இடையே ஊறுகாய் போல அவ்வப்போது இந்த நூடல்ஸ்ஸை சாப்பிடலாம். அப்படித்தான் இங்கு நாம் சாப்பிடுகிறோம்.. மற்றபடி தமிழகத் தொலைக்காட்சி  விளம்பரங்கள் அதனைக் கிடைப்பதற்கு அரிய ஒரு பொருளாக  காண்பிப்பது மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பாகும்!!

ஆனாலும் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. இது போன்ற விளம்பரங்கள் என்பது ஒரு வியாபார யுக்தி. வியாபாரிகள் வியாபாரத்திற்காக எந்த எல்லையையும் தாண்டுவார்கள்! அவர்களுக்கு விற்பனை தான் முக்கியம். மக்களின் நலன் என்பதெல்லாம் அவர்களுக்குத் தேவை இல்லாத ஒன்று! அது பற்றியெல்லாம் கவலைப்படக் கூடிய இடத்தில் அவர்கள் இல்லை!

நாம் சொல்ல வருவது இது தான்: இது சாப்பிடுவதற்கு ஏற்ற முழு உணவு அல்ல. சும்மா போகிற போக்கில் சாப்பிட்டுவிட்டுப் போகலாம். உடல் நலனைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் மிக மிகத் தாராளமாகச் சாப்பிடலாம்!  வீட்டில் சாப்படு இல்லாமால் தட்டுக்கெட்டச் சமயங்களில் இதனைப் பயன் படுத்திக் கொள்ளலாம்! அவ்வளவு தான்!

தேவை இல்லாமல் தேவலோகத்து தேவாமிர்தம் என்று நினைத்து உங்கள்  உடல் நலனைக் கெடுத்துக் கொள்ளதீர்கள்!

நல்ல உணவுகளைத் தேர்ந்து எடுத்து நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ பிள்ளைகளுகுச் சொல்லிக் கொடுத்து நாமும் ஆரொக்கியமாக வாழ்வோம்.

வாழ்த்துகள்!




No comments:

Post a Comment