Friday 21 October 2016

காலை வணக்கம்..!


காலை வணக்கம்! Good Morning! Selamat Pagi!

காலை நேரத்தில் "காலை வணக்கம்!"  என்று சொல்லும் போது  மனதில் மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கையே! இதை சொல்லுவதற்குக் கூட சிலரால் முடியாது! பதவியில் உள்ளவன் கீழே உள்ளவனைப் பார்த்து அப்படி சொல்லுவதில்லை! அது அவனுக்குக் கௌரவக் குறைச்சல்! இருக்கட்டும்!

ஆனாலும் வெள்ளைக்காரனுக்கு அது ஒரு பிரச்சனை அல்ல. அவன் எவ்வளவு தான் நம் எதிரியாக இருந்தாலும் அவன் வணக்கம் சொல்லத் தவறுவதில்லை. அது அவனது ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. அதனை அவனால் மாற்றிக் கொள்ள முடியாது!

நம்முடைய நிலை வேறு. எந்த நல்ல பழக்கங்களையும் நாம் வீட்டில் சொல்லிக் கொடுப்பதில்லை! எங்கு நாம் தவறு இழைத்தாலும் "படி! படி!" என்று குழந்தைகளை வற்புறுத்தி படிக்கவைப்பதில் மட்டும் நாம் தவறு இழைப்பதில்லை!

இளைஞர் ஒருவரைத் தெரியும்.  காலை நேரத்தில் உணவகத்திற்குள் சுறுசுறுப்பாக நுழைவார். பார்ப்பவர்களையெல்லாம் "காலை வணக்கம்! காலை  வணக்கம்!  என்பார். மலாய்க்காரர்களைப் பார்த்தால் "செலமாட் பகி!" என்பார். அதுவரை எந்த சலனுமும் இல்லாமல் இருந்தவர்களைத்  தனது காலை வணக்கம் மூலம் ஒரு சுறுசுறுப்பை உண்டாக்கிவிடுவார்!

இது போன்ற காலை வேளைகளில் "வணக்கம்" என்னும் போது உடலில் ஒரு சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் ஏற்படுவது இயற்கை. .  காலையில் புத்துணர்சி ஏற்படும் போது அது அன்று பூராவும் நமது உடலை உற்சாகமாக வைத்திருக்கும்!

காலை வேளையில் மனம் திறந்து வணக்கம் என்று சொல்லுங்கள். அன்றைய தினம் உங்களைப் பார்த்து அனைத்தும்  வணக்கம் என்று சொல்லுவது போல் இருக்கும்!

அந்த நண்பர் நம்மைப் பார்த்து வணக்கம் என்று சொன்னாலும்  அன்றைய தினத்தை அன்று பூராவும் அவர் - தன்னை உற்சாகமாக வைத்துக் கொள்ளுகிறார்! கேட்பவர்களை விட சொல்லுபவர் இன்னும் தன்னை உற்சாசாகப் படுத்திக் கொள்ளுகிறார். அது தான் உண்மை.

காலைப் பொழுதை உற்சாகமாக ஆரம்பியுங்கள்! குழந்தைகளிடம் வணக்கம் சொல்லுங்கள்! மனைவியிடன் வணக்கம் சொல்லுங்கள்! நண்பர்களிடம் வணக்கம் சொல்லுங்கள்!

அன்றைய நாளை வணக்கம் சொல்லி உற்சாகமான  நாளாக ஆக்கிக்கொள்ளுங்கள்! அனைத்தும் நமது கையிலே!

வணக்கம் தலைவா!

No comments:

Post a Comment