Friday 7 April 2017

கேள்வி-பதில் (42)


கேள்வி

சென்னை, ஆர்கே நகர இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?


பதில்

திராவிடக் கட்சிகள் தான் வெற்றி பெறும் என்பதாகக்  கணிப்புகள் கூறுகின்றன. அ.தி.மு.க. வின் பன்னிர்செல்வமோ  அல்லது CAP மாறி "கேப்மாரி" ஐயாவோ  வெற்றி பெறலாம்! அவைகள் வெற்றி வாய்ப்பை இழந்தால் தி.மு.க. தான் வெற்றி பெறும்!

ஆனாலும் பெரும்பாலான கணிப்புகள் தி.மு.க. விற்கே வெற்றி வாய்ப்புகள் இருப்பதாகக் கணிக்கின்றன.

அதனால் தான் எடப்பாடி பணத்தை தண்ணீராகச்   செலவழித்துக் கொண்டிருக்கிறார்! .சிறையில் இருந்தாலும் சின்னம்மாவின் குரல் இன்னும் ஒங்கி ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது! சின்னம்மா சொன்னால் அதனைத் தட்ட முடியாத சூழ்லில் இருக்கிறர் எடப்பாடி. அத்தோடு மட்டும் அல்லாமல் அவரது பதவியையும் அவரால் விட்டுக் கொடுத்து விட முடியாது. அதனையும் அவர் காப்பாற்றியாக வேண்டும். பணமும் செலவாகிக் கொண்டு இருக்கிறது. அதே சமயத்தில் பணம் பட்டுவாடா செய்யும் அவரது ஆள்களும் கைதாகிக் கொண்டு இருக்கிறார்கள்!

ஒரு வேளை தேர்தல் ஆணையம் கடைசி நேரத்தில் இடைத் தேர்தலை ஒத்தி வைக்கும் படியும் ஆகலாம்! அந்த அளவுக்குப் பணம் ஆர்கே நகரில் துள்ளி விளையாடுகிறது!  எதிர்கட்சிகளும் சும்மா இருப்பதாக இல்லை. தேர்தல் ஆணையத்திடம் ஆளுங்கட்சியின் மீது புகார்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளன!

ஒரு தரப்பினரையே நாம்  குற்றம் சாட்டினாலும் தி.மு.க.வும், பன்னிர்செல்வமும் அப்படி ஒன்றும் காமராசராக ஆகிவிடவில்லை!அவர்களும் கொடுக்க வேண்டியதை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறாகள்!  இத்தனை ஆண்டுகள் பணத்தைக் கொடுத்தே வாக்குகளை வாங்கியவர்கள் இப்போது மட்டும் என்ன சும்மா இருக்க முடியுமா? கொடுத்துத் தான் ஆக வேண்டும்! வேறு வழியில்லை!

தி.மு.க. வே வெற்றி பெறும் என்பது பொதுவான கணிப்பு. மற்ற கட்சிகளை எடுத்துக் கொண்டால் அகில இந்திய கட்சியான பா.ஜ.க. வெற்றி வாய்ப்பு மிகக் குறைவு. கங்கை அமரன்  பிரபல இசையமைப்பாளர் என்னும் முறையில் ஒரு சில வாக்குகள் விழலாம்! அதனைப் பெரிது படுத்த ஒன்றுமில்லை! மற்ற கட்சிகளில் - நாம் தமிழர் கட்சி - யைத் தவிர்த்து மற்ற கட்சிகளைப் பற்றி சொல்லுவதற்கு ஒன்றுமில்லை!

நாம் தமிழர் கட்சியின் சீமான் என்ன தான் கத்தோ கத்தென்று கத்தினாலும் இன்றைய நிலையில் அவர் வெற்றி  பெறும் வாய்ப்புக்கள் குறைவு! ஆனாலும் அவரது பிரச்சாரம் வீணாக வழியில்லை!  அவரது பிரச்சாரம் மக்களிடம் போய் சேர வேண்டுமென்று நினைக்கிறார். அது சேருகிறது என்பதே அவருக்கு மகத்தான வெற்றி.

மெரினா கடற்கரையில் சேர்ந்த மாணவர் கூட்டம், மேற்கத்திய குளிர்பானங்கள் புறக்கணிப்பு போன்றவைகள் எல்லாம் சீமானும் அவர் தம்பிகளும் தமிழகமெங்கும் விதைத்த விதைகள்.. அவை பலன் தருகின்றன.

தமிழ் நாட்டுக்கு சரியான ஒரு பாதையைப் போட்டு சரியான ஒரு வழியைக் காட்டிக் கொண்டிருக்கிறார் சீமான்! இப்போதைக்கு அது எடுபடாவிட்டாலும் இளைய தலைமுறையினரிடையே அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்துக்  கொண்டிருக்கிறது!

ஆர்கே நகரில் யார் வெற்றி பெறுவார் என்றால் தி.மு.க. விற்கே வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என்பதாக அரசியல் பார்வையளர்கள் கூறுகின்றனர்.

நான் நாம் தமிழர் கட்சி வெற்றிபெறுவதையே விரும்புகிறேன்!






No comments:

Post a Comment