Friday 17 November 2017

எதிர்கட்சி ஆதரவாளரா தலமையாசிரியை?





துடிப்பு மிக்க தலமையாசிரியை ஒருவர், பள்ளிக்கு மாற்றலாகி ஓர் ஆண்டு காலம்  கூட  ஆகாத  நிலையில், திடுதிப் என மாற்றப்பட்டிருக்கிறார். 

பட்டர்வொர்த், மாக்மாண்டின் தமிழ்ப்பள்ளியின் தலமை ஆசிரியை, திருமதி தமிழ்ச்செல்வி தான் அந்த மாற்றத்திற்கு உரியவர். இந்தத் தீடீர் மற்றம் ஏன்?  மாக்மாண்டின் தமிழ்ப்பள்ளியின் விரிவாக்கதிற்கு 1,00,000 ஒரு இலட்சம் வெள்ளியும், பள்ளியின் பாலர் பள்ளியின் வளர்ச்சிக்கு  10,000 பத்தாயிரம் வெள்ளியும் அவருக்குத் தேவைப்பட்டது.  துணைக்கல்வி அமைச்சர் பி.கமலநாதனின் அமுதசுரபியான எந்த ஒரு சாராய ஆலைகளாலும்  அதனைக் கொடுக்க இயலாத நிலையில், தலமை ஆசிரியை மாநிலத்தை ஆட்சி  செய்யும் எதிர்கட்சி அரசாங்கத்திடம் உதவியை  நாடியிருக்கிறார். மாநில  முதல்வர், துணை முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பள்ளிக்கு வருகை தந்து பள்ளிக்குத் தேவையான நன்கொடையை அளித்திருக்கின்றார்கள். மத்திய அரசாங்கம் தேவையான நன்கொடையை அளிக்க முடியாத நிலையில்  மாநில அசாங்கம் பள்ளிக்குக் கை கொடுத்தது மத்திய அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படி? எப்படி? எப்படி? என்று மேலும், கீழும் குதித்துவிட்டு கடைசியில் "எங்களிடமா உன் வில்லத்தனம்?"  என்று அந்தத் தலமை ஆசிரியரை  பிறை தமிழ்ப்பள்ளிக்கு மாற்றி விட்டார்கள்!

ஏன் மாற்றினோம் என்பதற்கு ஒரு நொண்டிச்சாக்கையும் கூறியிருக்கிறார்கள்! இவர் மட்டும் அல்ல இன்னும் ஏழு தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த தலமை ஆசிரியர்களும் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதாக! ஆனால் இங்குக் கேட்கப் படுகின்ற கேள்வி: நன்கொடை கொடுப்பதற்கு முன்னதாக ஏன் இந்த மாற்றம் வரவில்லை? என்பது தான்!

கமலநாதன் சார்! நீங்கள் நீடூழி காலம்  வாழ்ந்து 'அம்னோ'வுக்குச் சேவை செய்து பல பட்டங்களையும் பதவிகளையும் பெற வாழ்த்துகிறேன்!

No comments:

Post a Comment