Sunday 12 November 2017

ஏன் தமிழன் ஆள வேண்டும்..?


தமிழன் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டுமா என்று கேட்டால் "ஆமாம்! தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள் வேண்டும்!" என்று சத்தம் போட்டுச் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது. அது தமிழர்களின் உரிமை. எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்களே தான் முதலமைச்சராக இருக்கிறார்கள். அதனால் தமிழன் தான் தமிழ் நாட்டை  ஆள வேண்டும் என்று நாம் சொல்லுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தமிழர் அல்லாதார் கேள்வி எழுப்புவதும் சரியில்லை.

இத்தனை ஆண்டுகள் எழாத கேள்வி இப்போது ஏன் எழுகிறது? கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு யாருக்குக் கிடைத்தது? கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா - இவர்கள் அனைவருமே தமிழர் அல்லாதார். இடையிடையே அவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் தமிழர்கள் அல்ல.  அதுவல்ல நாம் எழுப்பும் கேள்வி.  இந்தத் தமிழர் அல்லாதார் மூலம் தமிழ் மக்கள் அடைந்த பயன் என்ன?  அவர்கள் செய்த துரோகங்கள் தான் அதிகம். நல்லவைகளை விட கொடுமைகளே அதிகம்.

குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். சாராயக்கடைகளை அரசாங்கமே ஏற்று நடத்துகிறது! யாருடைய நிறுவனங்கள் அவை? கருணாநிதி, ஜெயலலிதா குடும்ப நிறுவனங்கள்!  எம்.  .ஜி.ஆர். சினிமாப் படங்களில் குடிப்பதில்லை. ஆனால் அவர் ஆண்ட காலத்திலும் சாராயக்கடைகளை அதிகரித்தாரே தவிர குறைப்பதற்கான  எந்த  முயற்சிகளும் எடுக்கவில்லை! அவர் நல்லவராக இருந்து என்ன பயன்? தமிழக மக்களைக் குடிகாரர்களாக ஆக்கிய அவரை  எப்படித்  தமிழர்கள் நல்லவர்  என்று சொல்ல முடியும்? 

தமிழ் நாட்டில் தமிழ் மொழியின் நிலை என்ன?  கருணாநிதியைத் தமிழறிஞர் என்கிறோம். அவர் காலத்தில் தானே ஆங்கிலத் தனியார்  பள்ளிகள் அதிகமாகின  உருவாகின? அரசுப்  பள்ளிகளை "கார்ப்பரேஷன்"  பள்ளிகள்  என்று கேவலாமாகப் பேசப்பட்டன.  அவர் அதனை ரசித்தாரே தவிர அரசுப் பள்ளிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே!  ஓரு தமிழறிஞர் தமிழின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கவில்லையே! அவர் குழி தோண்டி அல்லவா புதைத்தார்!

தமிழர் வரலாறு மாணவர்களுக்குத் தெரியவில்லையே! யார் குற்றம்? மீனவர்கள் பிரச்சனை ஓயவில்லையே, யார் குற்றம்? ஈழத் தமிழர்களை  கொத்து கொத்தாகக் கொன்று குவித்தனரே அதனைக் கண்டும் காணதவாறு இருந்தது யார் குற்றம்? அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் யார்? தமிழர் அல்லாதவர்கள் தானே?இந்த அளவு தமிழர்களைக் கேவலமாக ஆட்சி செய்த இந்த தமிழர் அல்லாதார் ஆட்சியைத் தொடர வேண்டுமா, என்ன?

இவர்களின் ஆட்சியில் தமிழர்களுக்கு நல்லது நடந்திருந்தால் நாங்கள் ஏன் "தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும்" என்னும் கோஷத்தை எழுப்புகிறோம்? அதற்குத் தேவையே இருந்திருக்காதே! நடந்தது காட்டுமிராண்டி ஆட்சி! அது ஏன் தோடர வேண்டும்?

ஆக, இனி தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்னும் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்! வாழ்க தமிழினம்!


தொடர்ந்து குரல் கொடுப்போம்! இழந்தவைகளை மீட்போம்!

No comments:

Post a Comment