பூண்டுகளைக் கூட போலியாகத் தயாரிக்க முடியுமா? முடியும் என்று மார்தட்டியிருக்கிறார்கள், இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில், அகோலா மாவட்டத்தில் உள்ள சில வியாபாரிகள்!
விஞ்ஞானிகள் ராக்கெட்டுகளை சந்திரமண்டலத்திற்கு அனுப்பும் போது வியாபாரிகள் பூண்டுகளில் சிமின்ட் கலந்து 'சிமின்ட் பூண்டுகளை' மக்களிடம் அனுப்பவதில் என்ன க்ஷ்டம்?
தெரு ஓரங்களில் உள்ள கடைகளில் இந்த சிமிண்ட் பூண்டுகளை முதலில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இவர்களுடைய வாடிக்கையாளர்கள் இதனைக் கண்டுபிடிக்க இயலாது என்கிற துணிச்சலில் தான் இந்த வியாபாரிகள் முதலில் தெரு ஓரக்கடைகளுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால் எத்தனை நாள்களாக இந்த விற்பனை நடந்து வருகிறது என்பது தெரியவில்லை. ஆனாலும் இந்த வியாபாரம் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. உண்மையான பூண்டுகளுக்கும் போலி பூண்டுகளுக்கும் நிச்சயமாக வித்தியாசம் தெரியாமல் போகாது. இவர்களின் தொழில்நுட்பம் தோல்வியில் முடிந்து விட்டது என்பதில் நமக்கும் மகிழ்ச்சி தான்.
அதுவே வாடிக்கையாளர்கள் ஏழைகளாக இருந்தால் அவர்களைப் பயமுறுத்தி செய்தி வெளியாகாமல் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் என்ன செய்ய? வாடிக்கையாளர் முன்னாள் போலீஸ்காரரின் மனைவி என்பதால் செய்தி தெருவுக்கு வந்துவிட்டது!
எது எப்படியிருந்தாலும் இது போன்ற போலி தயாரிப்பாளர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது மட்டும் நிச்சயம். பூண்டு என்பது மிகவும் அத்தியாவசியமான அன்றாட உணவு. உணவில் சிமிண்ட் கலப்பது என்பது மிகப்பெரிய குற்றம். இது போன்ற குற்றம் செய்பவர்கள் ஏற்கனவே பல குற்றங்கள் செய்திருப்பர். குற்றம் செய்பவர்கள் தான் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்.
என்னன்னவோ ஏமாற்று வேலைகளையெல்லாம் பார்த்துவிட்டோம். போலிகளைப் பார்த்துவிட்டோம். பூண்டு வந்துவிட்டது. ஆனால் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இன்னும் வரவில்லை. வெங்காயத்திற்கும் இப்படி ஒரு கஷ்ட காலம் வருமோ என்று தெரியவில்லை. இறைவா! நீர் தான் துணை!
No comments:
Post a Comment