Wednesday 15 February 2017

சிறை எதிர்பார்க்கப்பட்டது தான்!


சின்னம்மா சசிகலாவுக்குச் சிறை தண்டனை  என்பது எதிர்பார்க்கப்பட்டது தான்.

ஆனாலும் அவர் கொடுத்த "பில்டப்"  சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கையில் பணம் இருப்பதால் தன்னால் எதனையும் செய்ய முடியும் என்கின்ற ஒரு இறுமாப்பு அவரிடம் இருந்தது.

தமிழ் நாட்டையே கொள்ளையடித்த ஒரு கும்பல் இந்த அளவுக்கு அராஜகமான செயல்களைச் செய்ய முடியும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

சசிகலாவின் பின்னணி நமக்குத் தெரியவில்லை. ஓரு பெண்மணி இந்த அளவுக்குக் கொடூர மனம் படைத்தவராக இருக்க முடியும் என்றால் அவருடைய குடும்பம் எந்த அளவுக்கு பயங்கரமான் குடும்பமாக இருக்க முடியும் என்பதை நம்மால்  ஓரளவுக்குத் தான் ஊகிக்க முடியும்.

தமிழ் நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சியைப் பற்றி  நாம் பெரிதாக ஒன்றும் சொல்லுவதற்கில்லை. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. சசிகலாவின் மன்னார்குடி  குடும்பம் தான் ஜெயலலிதாவை ஆட்டிப் படைத்திருக்கிறது.

மற்றவர்கள் அவரைப் பற்றி பேசும் போது ஜெயலலிதா நல்லவராகத்தான் தென்படுகிறார். ஆனால் இந்த மன்னார்குடி குடும்பம் அவரைத் தவறான வழிக்குக் கொண்டு சென்றிருக்கிறது என்பது உண்மையாகத்தான் இருக்க வெண்டும்.

இசை அமைப்பாளர் கங்கை அமரன் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனது வீட்டை - சில இலட்சங்களைக் கொடுத்து -  தன்னிடமிருந்து  வற்புறுத்தி வாங்கினார்கள் என்பதாக மன்னார்குடி குடும்பத்தின் மீது குற்றம் சொல்லுகிறார். ஒரு பிரபலமான மனிதருக்கே இந்த நிலைமை என்றால்..?  ஏன்? நடிகர் திலகம் சிவாஜியின் குடும்பத்திலேயே இவர்கள் சம்பந்தம் செய்திருக்கிறார்கள் என்றால் எல்லாமே பயமுறுத்தால் தான்.

ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தி தமிழகத்தையே கொள்ளையடித்த ஒரு குடும்பம் சசிகலாவின் குடும்பம். கடைசியில் ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்து அவரையே தீர்த்து கட்டிவிட்டார்கள்! உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்த குடும்பம் இந்த சசிகலாவின் குடும்பம்.

அதனால் தான் தமிழகமே சசிகலா பதவிக்கு வரக்கூடாது என்று கொதித்து எழுந்தது! தமிழக மக்கள் அவரை வெறுத்தனர். ஆனால் அவருடைய சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் அவருக்கு ஆதரவு கொடுத்தனர்!  அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கோடிகள் கிடைத்தனவா என்பது தெரியவில்லை!

சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் தண்டனை போதாது என்பதாகத்தான் தமிழக மக்களின் கருத்தாக இருக்கிறது! தங்களின் சுயநலனுக்காக எதனையும் செய்யத் தயாராய் இருந்தவர்கள் இந்த மன்னார்குடி குடும்பம்.

ஆனால் இவர்களின் ஆட்டம்  முடிந்து விட்டதாக முற்றாகப்முற்றுப்புள்ளி வைத்து விட முடியாது.  வேறு வகையில் விஸ்வரூபம் எடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment