Monday 20 February 2017
பொருளாதாரமே வலு சேர்க்கும்!
நமது சமுதாயம் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
இந்த முன்னேற்றம் என்பது தனிப்பட்டவர்களின் முயற்சி. பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக, கல்விக்காக பெற்றோர்கள் தங்களது வாழ்நாள் சேமிப்புக்களை அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள்!
ஒரு பக்கம் கல்விக்காகவும் செலவழிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பிள்ளைகள் தொழில் செய்ய, வியாபாரா முன்னேற்றத்திற்காகவும் தங்களின் சேமிப்புக்களைக் கொடுத்து உதவுகிறார்கள்.
ஒரு பக்கம் சேமிப்புக்களை இழந்து நின்றாலும் இன்னொரு பக்கம் பிள்ளைகளின் வளர்ச்சி பெற்றோர்களை மகிழ்ச்சி அடையைச் செய்கிறது. பிள்ளைகளின் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றோர்களும் விரும்புகிறார்கள்.
பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு மனிதனின் தனி முயற்சி.. தான் வளர வேண்டும் என்னும் தன் உள்ளே ஏற்படும் உந்துதல். ஏதோ ஒன்று அவனை உந்தித் தள்ளுகிறது.
வளர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும். பணத்தை அள்ளிக்கொடுங்கள் என்பது அதன் அர்த்தமல்ல. ஊக்கமூட்டும் வார்த்தைகளே போதும்.
இன்று நமது சமூகத்தில் நிறைய மருத்துவர்களைப் பார்க்கிறோம். வழக்கறிஞர்களைப் பார்க்கிறோம். அதற்கு மேல்...? வேறு உயர் கல்விகள் இருக்கின்றன என்பதே பலருக்குத் தெரியவில்லை. படித்தவர்களுக்கும் தெரியவில்லை; படிக்காதவர்களுக்கும் தெரியவில்லை!
எந்தத் துறையை நாம் தேர்ந்தெடுத்தாலும் அதன் மூலம் நாம் நமது பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள முடியுமா என்பது தான் முக்கியம். மருத்துவர்கள் அனைவரும் பொருளாதார வெற்றி பெற்றவர்கள் என்று சொல்ல முடியாது. வழக்கறிஞர்கள் அரசியலுக்குப் போவதே அவர்கள் துறையில் வெற்றிபெற முடியவில்ல என்பதால் தான்.
எந்தக் கல்வியை நீங்கள் தெர்ந்தெடுத்தாலும் பாதகமில்லை. ஆனால் வெற்றி பெற வேண்டும் என்பது தான் முக்கியம். அதுவும் பொருளாதார வெற்றி என்பதே மிக மிக முக்கியம்.
பொருளாதார வெற்றி தான் இந்தச் சமுதாயத்தை தலை நிமிர வைக்கும். மற்றவர்களுக்கு நம் மீது ஒரு மரியாதை ஏற்படும்.
பொருளாதார வளர்ச்சியே நமது குறிக்கோளாக இருக்கட்டும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment