Monday, 6 February 2017
காலையிலேயே தடங்களா..?
காலையில் வேலைக்குப் போகும் நேரம். எல்லாம் அவசர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும். நாம் மட்டும் என்ன விதிவிலக்கா?
இப்படித்தான் ஒரு காலை வேளையில் அவசர அவசரமாக இயங்கிக் கொண்டிருந்த போது ஒரு தடங்கள் ஏற்பட்டது! அதை சரி செய்து கொண்டு அடுத்த வேலையைத் தொடர்ந்த போது அங்கும் இன்னொரு தடங்கள்!
அப்போது என்ன மன நிலையில் நாம் இருப்போம்? ஏற்கனவே நமது தமிழ் திரைப்படங்கள் நமக்குச் சில பாடங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கின்றன: 'காலங்காட்டிலுமா...? இன்னிக்கு எதுவுமே உருப்படாது..!'
இந்த மனநிலையில் தான் அன்றைய நாள் முழுவதும் நமது பணிகளைச் செய்வோம். அன்றைய தினம் நாம் எதிர்பார்த்தபடியே எதுவும் உருப்படாது! அது தானே நமக்கு வேண்டும்? அப்புறம் எப்படி உருப்படும்?
அதற்குப் பதிலாக வேறு மாதிரியாக நாம் அதனை மாற்றி அமைக்கலாம். நமது எண்ணங்களை வேறு திசைக்குக் கொண்டு செல்லலாம்.
"இந்தத் தடங்கல்கள் நமக்கு நல்லதையே செய்திருக்கின்றன. எப்போதும் போல் போயிருந்தால் ஏதேனும் நடக்கக் கூடாதது நடந்திருக்கலாம்! அது இப்போது தவிர்க்கப்பபட்டுவிட்டது! இன்றைய தினம் நல்லதொரு தினமே. இன்று அனைத்தும் மகிழ்ச்சியாக அமையும்."
இப்படி ஒரு மன ஓட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்மறையான சிந்தனையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். எல்லா எதிர்மறைகளிலும் ஓர் நேர்மறையான ஓட்டம் உள்ளது. அதனைப் புரிந்து கொள்ளுங்கள்.
நடைமுறை வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்கள் சம்பவிக்கிறன. நல்லதை மட்டுமே நாம் எதிர் நோக்க வேண்டும். நல்லது நடக்கும் என்னும் போக்கிலேயே நமது சிந்தனைகள் அமைய வேண்டும்.
அதுவும் காலை நேரம் என்றால் வேலைக்குச் செல்பவர்களுக்கு எத்தனையோ சோதனைகள். இந்தச் சோதனைகளை எல்லாம் மீறி தான் சாதனைகள் நிகழ்த்தப் படுகின்றன.
தடங்களா? இருந்து விட்டுப்போகட்டும்! அதனையும் தடாகமாக மாற்றுவோம்!
Labels:
கோடிஸ்வரர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment