Saturday 25 February 2017

மழையில் நினைந்தால் என்ன?


காலை நேரம். மழை பெய்து கொண்டிருந்தது. நண்பரிடம் குடை இல்லை. மழையிலேயே நினைந்து கொண்டு வந்தார்.

"என்ன, இப்படி மழையில் நினைந்து கொண்டு வருகிறீர்களே?" என்று கேட்டேன்.

"ரொம்ப சந்தோஷம்! இப்படி ஒரு சந்தோஷம் மீண்டும் கிடைக்குமா, யார் கண்டார்? சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை அனுபவிப்போமே!" .நண்பர் அந்த அனுபவத்தை ரசித்து மகிழ்ந்து போனார்!

ஆம்! இது தான் ஒர் அற்புதமான மனநிலை. குடை இருந்தால் குடையைப் பயன்படுத்தலாம். குடை இல்லையா மழையில் நினைவோம்! அவ்வளவு தான்! இதனைப் பெரிது படுத்த என்ன இருக்கிறது?

நாம் வேண்டுமென்றே எதனையும் செய்யவில்லை. குடை இல்லை அதனால் நினைந்தோம்.

ஒரு சிலர் இதனை ஒரு பிரச்சனையாகவே பார்ப்பார்கள். அடாடா1 மழையில் நினைந்து விட்டேன், சளி பிடிக்கப் போகிறது! காய்ச்சல் வரப்போகிறது! ஏதோ உலகமே அழிந்துவிடுவது போல ஒரே பிதற்றல்! ஒரே புலம்பல்!

ஒன்றுமில்லை என்றால் ஒன்றுமில்லை தான்! ஏதோ ஆகிவிடும் என்றால் ஏதோ ஆகிவிடும் தான்! இதில் குழப்பமே வேண்டாம்!

எனக்குத் தெரிந்த மருத்துவ உதவியாள நண்பர். கொஞ்சம் வயதானவர்.மழை என்றாலே பயப்படுவார், அப்படியே மழையில் நினைந்து விட்டால் உடனே மருந்து மாத்திரை என்று உள்ளே தள்ளுவிடுவார்!

மழையில் நினைந்துவிட்டால் உடனே தனக்கு நிம்மோனியா காய்ச்சல் வரும் என்று புலம்பிக் கொண்டிருப்பார்!  கடைசிக் காலத்தில் நிம்மோனியா காய்ச்சலால் அவர் இறந்து போனார்!

அவர் நிம்மோனியா காய்ச்சல் என்றாலே மிகவும் கடுமையாகக் கருதுபவர். அப்படியே அந்தக் காய்ச்சல் இல்லை என்றாலும் அவர் யாரையும் நம்பிவிட மாட்டார்! மழையில் நினைந்தால் நிம்மோனியா காய்ச்சல் வரும் என்பதை அவர் தீர்மானித்து விட்டார். யார் அவரை மாற்ற முடியும்?

மழையில் நினைவதெல்லாம் ஒரு சாதாரண விஷயம். நினைந்து விட்டால் ஒரு துண்டை எடுத்து தலையைத் துவட்டிவிட்டு அடுத்த வேலைக்குத் தயாராக வேண்டியது தான். அதனைப் பெரிது படுத்தி தனக்குத் தானே வியாதியை வரவழைத்துக் கொள்ளுவது ஒரு சிலருக்குப் பொழுது போக்காக இருக்கலாம்! ஆனால் பயனற்ற பொழுது போக்கு!

எல்லாமே நமது எண்ணங்கள் தான்!   உங்கள் எண்ணங்களை வலிமையாக வைத்துக் கொள்ளுங்கள்!                                                                                                                                                        

No comments:

Post a Comment