Wednesday 20 September 2017

200 ஆண்டு கால வரலாறு..!


மலேசிய தமிழ்க்கல்வி 200 ஆண்டு கால வரலாற்றப் பெற்றிருக்கிறது என்பதை அறிய  நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே. ஒரு பக்கம் கல்வி அமைச்சு அதனை ஊக்குவிப்பது போல நடந்து கொண்டாலும் இன்னொரு பக்கம் தமிழை அழிக்கும்  முயற்சியிலும் அது ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.  அழிப்பதற்குத் தலைமை ஏற்றிருப்பவர் வேறு யாருமல்ல.  தமிழுக்காக, தமிழின் வளர்சிக்காக, தமிழ்ப்பள்ளிகளின் தரத்திற்காக, தமிழ்ப்பள்ளிகளின் உயர்விற்காக  அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதியாக வீற்றிருக்கும் மாண்புமிகு துணையமைச்சர் கமலநாதன் அவர்கள் தான்!

என்ன செய்வது?  கல்வி அமைச்சு அவரைப் போன்ற பொம்மைகள் தான் துண அமைச்சராக தங்களுக்கு வேண்டுமென்று அடம் பிடிக்கிறார்கள்! ஒரு பிரச்சனையும் இல்லை. ம.இ.கா. வில் மேலிருந்து கீழ் வரை எல்லாருமே பொம்மைகள் தான்! கமலநாதனும் அதற்கு விதிவிலக்கு அல்ல!

அவரால் என்ன நேர்ந்தது? ஒன்றுமே நேரவில்லை! அது தான் அவரது திறமைக்குச் சான்று! தமிழ்ப்பள்ளிகளுக்கென்று அரசாங்கம் கோடி கோடியாக பணம் செலவழித்ததாக சொல்லப்படுகின்றது. ஆனால் எந்தப் பள்ளிக்கூடத்திற்காக பணம் செலவிடப்பட்டது என்றால் அந்த இரகசியம் வெளியே சொல்ல மறுக்கப்படுகின்றது. நாம் என்ன நினைப்போம்? அந்தப் பணத்தை அம்னோவும்,  ம்.இ.கா.வும் பங்குப்போட்டுக் கொண்டதாகத்தான் நினைப்போம். ஒரு விளக்கமும் இல்லை என்றால் நாமாகவே ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டியது தான். இப்போது கூட ஒரு செய்தி. பட்டாணி பாரா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மேற்கூரையைக் கறையான் அரித்து விட்டதால் அந்தக் கூரை எந்த நேரத்திலும் விழும் அபாயத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாயிருக்கின்றன. இது கல்வி அமைச்சுக்கும் தெரியும். துணை அமைச்சருக்கும் தெரியும். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை! இது ஒன்றே போதும், துணை அமைச்சர் கமலநாதனின் தமிழ்க்கல்வியின் மேல் உள்ள கரிசனமும் அபிமானமும்!

இந்தத் துரோகம் ஒரு பக்கம் என்றால் தமிழ்ப்பள்ளிகளில் இரு மொழித்திட்டத்தைக் கொண்டு வந்து தமிழை முற்றிலுமாக அழிக்கும் புது வகையான அழித்தல் முறை. இதன் மூலம் தமிழ் ஒரே பாடம் மட்டுமே! மற்றவை அனைத்து பிற மொழிகளில் - மலாய், ஆங்கில மொழிகளில்! அப்படி என்றால் தமிழ்ப்பள்ளிகளில் ஓரிரு தமிழாசிரியர்கள் போதும்! தமிழ் ஆசிரிய்ர்கள் இல்லாத தமிழ்ப்பள்ளிகள்! இந்தத் மொழித் திட்டத்தை சீனர்கள் வரவேற்கவில்லை.  ஆனால் தமிழ்ப்பள்ளிகளில் கோடரிக்காம்புகள் நிறைய இருக்கின்றனரே!  அதுவும் நமது துணை அமைச்சரே சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் சென்று நெருக்கதல் கொடுப்பதாகச் சொல்லப்படுகின்றது. அதாவது அடுத்த கல்வி துணை அமைச்சர் ஆவதற்கு இப்போதே பதியம் போட்டுக் கொண்டிருக்கிறார்! 

இப்படியெல்லாம் தமிழுக்கு ஒரு பக்கம் துரோகம். இன்னொரு பக்கம் 200 ஆண்டு கால வெற்றி விழா! அடாடா! என்னமாய் நடிக்கிறார்கள்! துரோகிகளுக்குத் தான் இந்த நடிப்பு வரும்!

No comments:

Post a Comment