Monday, 18 September 2017

நாட்டுப் பற்றா...?


Vanakkam Malaysia

மேலே மாமாக் உணவகத்தின் ஊழியர்கள் தங்களது நாட்டுப் பற்றை  வித்தியாசமான முறையில் காட்டியிருக்கிறார்கள்! தேசியக் கொடியினைப் போன்று துணிகளைப் பயன்படுத்தி   தங்களது நாட்டுப் பற்றினைக் காட்டியிருக்கிறார்கள்!

நிச்சயமாக அந்த உணவகத்தில் தேசியக் கொடியினைப் பறக்க விட்டிருப்பாகள் என்பதில் ஐயமில்லை. ஆனால் தங்களது நாட்டுப்பற்றைக் காட்ட ஊழியர்களும் இப்படி ஒரு வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்! தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கைகளில் அழுக்குப் படியும் போது தேசியக்கொடியைச் சமயலுடையாகப் பயன்படுத்துவார்களே என்னும் போது தான் அங்கே கொஞ்சம் நெருடல். அழுக்குகளைத் துடைக்கவா தேசியக்கொடி? ஆனாலும் இந்த ஒரு நாளைக்காவது அழுக்கைத் துடைக்க தனியாக துணிகளைக் கொண்டிருப்பார்கள் என நம்பலாம்!

நமக்குத் தெரிந்தவரை மேற்கு நாடுகளில் இதெல்லாம் ஒரு பிரச்சனை அல்ல. அவர்களது தேசியக்கொடியில் நீச்சல் உடைகள், உள்ளாடைகள், சட்டைகள் - இப்படி எதையாவது தைத்துப் போட்டுக் கொள்ளும் பழக்கம் அங்கு உண்டு.  இங்கு நாம் நாட்டுப்பற்றையும் தேசியக்கொடியையும் ஒன்றாகப் பார்க்கிறோம். ஊழல்களைக் கூட நாம் புறந் தள்ளுகிறோம்.

இதனை நாம் நாட்டுப்பற்றாகவே எடுத்துக் கொள்ளுவோம். தவறு என்றால் இனிமேல் நடைபெறாதவாறு பார்த்துக் கொள்ளுவோம். ஒன்று படுவோம்! ஒற்றுமைக் காப்போம்! வாழ்க மலேசியா!

No comments:

Post a Comment