Saturday, 17 February 2018
ஆசிரியர்களா? ரௌடிகளா?
கடந்த சில தினங்களாக ஆசிரியர்களைப் பற்றி வருகின்ற செய்திகள் மிகவும் வருத்தத்திற்குறிய செய்திகளாகவே வருகின்றன.
கடைசியாகக் கிடைத்த செய்தி: இரு மாணவர்களை ஆசிரியர் ஒருவர் அலமாரியில் போட்டு அடைத்து வைத்ததாகச் சொல்லப் படுகின்றது. அடைத்து வைத்த ஆசிரியர் அடைத்துவிட்டுப் போய்விட்டார்! அந்தச் சிறுவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே அவர்கள் அலமாரியை உடைத்து வெளியே வந்திருக்கின்றனர். அவர்கள் ஒரு மணி நேரம் அலமாரியில் அடைத்து வைக்கப் பட்டிருக்கின்றனர்.
ஆசிரியரின் கோபம் நமக்குப் புரிகிறது. ஆசிரியர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்போதுள்ள மாணவர்களை, இப்போதுள்ள சிறுவர்களை முந்தைய தலைமுறையினரோடு ஒப்பிட முடியவில்லை. இப்போதுள்ள குழைந்தைகளுக்கு சுட்டித்தனம் அதிகம்.
ஏன்? உங்கள் வீட்டுப் பிள்ளைகளும் அப்படித்தானே இருக்கிறார்கள்? உங்கள் வீட்டுப் பிள்ளைகளை இன்னொரு பள்ளியில் நீங்கள் செய்த அதே செயலையை வேறு ஓர் ஆசிரியர் செய்திருந்தால் நீங்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பீர்களா? அல்லது மலாய்ப் பிள்ளைகளை இப்படியெல்லாம் செய்வதற்கு உங்களுக்குத் துணிவு உண்டா?
இந்திய மாணவர்கள் என்றாலே அதெப்படி உங்களுக்குக் கோபம் கட்டுக் கடங்காமல் வந்து விடுகிறது? சுட்டித் தனமான மாணவர்களை எப்படித் திருத்த வேண்டும் என்பதை எல்லாம் உங்களுக்குப் பாடம் எடுத்திருப்பார்களே, மறந்து போனதா?
இருந்தாலும் உங்கள் செயலை நான் வரவேற்கவில்லை. உங்கள் செயலால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்ல என்பதால் இந்தத் தடவை அது உங்களுக்கு நல்ல நேரம். உங்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ரொம்பவும் மகிழ்ச்சி அடைந்து விடாதீர்கள். உங்களை - உங்களைச் சார்ந்த ஆசிரியர் சமூகம், மற்றும் பெற்றோர்கள் - உங்களை 'மெண்டல்' என்று கிண்டல் செய்கின்ற அளவுக்கு இது தொடரும்!
ஆசிரியர்களைக் கொண்டாடுகிற சமூகம் இந்திய சமூகம். அதனால் தான் அவர்களைக் குரு என்கிறோம்.
இனி மேலாவது குருவாக நடந்து கொள்ளுங்கள்.
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment