Friday 9 February 2018

ரிடுவானைப் பிடிக்க உதவுங்கள்!



கூட்டரசு பிரதேச சி.ஐ.டி. இயக்குனர் டத்தோஸ்ரீ வான் அகமட் நஜ்முடின் பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.  மேலே காணப்படும் ரிடுவான் அப்துல்லா -அல்லது  இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் - அவரைக் கண்டுப் பிடிக்க பொது மக்கள் காவல்துறைக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் படி ரிடுவான் அப்துல்லா தனது மகள் பிரசன்னா திக்‌ஷாவை அவளின் தாயார் இந்திரா காந்தியிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். நீதிமன்றம் கடந்த 2014 - ம் ஆண்டு மே மாதம் 30 - ம் தேதியன்று  தனது தீர்ப்பை அளித்தது. ஆனால் இது நாள் வரை அவர் அந்தக் குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைக்கவில்லை.  காவல்துறையாலும் அவரைக் கண்டு பிடிக்க இயலவில்லை! இதன் தொடர்பில் மக்கள் அவரது இருப்பிடத்தை அறிந்திருந்தால் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை ஜனவரி 29-ம் தேதி அறிவித்துள்ளது!

அவர் வெளி நாடு செல்லவில்லை என்பதாகக் குடிநுழைவுத் துறையும்   அதனால் அவர் மலேசியாவில் தான் இருக்கிறார் என்பதாகக் காவல்துறையும் கூறுகிறது!

ரிடுவானைக் கண்டுப்பிடிக்க உதவுங்கள்!





No comments:

Post a Comment