Sunday 10 June 2018

இந்தியர் விவகாரம்.......(3)


இந்தியர் விவகாரத் துறைக்கு மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையை விவாதத்திற்காக எடுத்துக் கொள்ளமாறு  கேட்டுக்கொள்ளுவது எனது கடமை எனக் கருதுகிறேன்.

கல்வி: மிக முக்கியமான ஒன்று. இந்திய சமுதாயத்தின் தேவைகளில் முதலிடம் பிடிக்க வேண்டிய ஒன்று. ஓர் ஏழை சமுதாயத்தைத் தூக்கி நிறுத்துவது கல்வி மட்டுமே. பொருளாதாரம் படு பாதாளத்தில்  இருந்தாலும் கல்வி இருந்தால் ஒருவனை ஓகோ ஓகோ என்று உயர்த்திவிடும்.நம்மைச் சுற்றிப் பார்த்தாலே  போதும் கல்வியால் எத்தனை குடும்பங்கள் -  மிகத் தாழ்வான நிலையில் இருந்த குடும்பங்கள் - இன்று கல்வியால் உயர்ந்து நிற்கின்றன என்பது தெரியும்.

இன்றைய காலக் கட்டத்தில் நமது மாணவர்களுக்கு இழைக்கப்படும்  அநீதிகள்  ஏராளம்.  என்ன தான் திறமைகள் இருந்தாலும் அவர்க்ள் விரும்புகின்ற துறைகளில் அவர்களால் பயணிக்க இயல்வில்லை. இப்போது தான் அவர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறந்திருக்கிறது. புதிய அரசாங்கம் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

நமது பல்கலைக்கழகங்களில் பொதுவதாக மருத்துவத்துறை,  பொறியியல்,  சட்டத்துறைகளில் நமது மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. அப்படியே நடந்தாலும் ஏதோ ஓரிவருவரோடு சரி.  அதனால் தான் இந்திய மாணவர்கள் தனியார் கல்லுரிகளுக்கோ, வெளி நாடு சென்றோ கல்வி கற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவர்களெல்லாம் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் அல்ல. பெரும்பாலும் தங்களது சொத்துக்களை விற்று பிள்ளைகளைப் படிக்க வைக்கும் நடுத்தர அல்லது ஏழை குடும்பங்கள்.

இனி நாம் உயர்கல்விக் கூடங்களில் அனைத்துத் துறைகளிலும் பத்து விழுக்காடு மாணவர்கள் கல்வி கற்பதை உறுதி செய்ய வேண்டும். வெளி நாடு சென்று படிக்க வேண்டும் என்னும் நிலை வேண்டாம்.

சமீபத்தில் மனித வள அமைச்சர் "இந்திய மாணவர்கள் தொழிற்பள்ளிகள் படிக்க விரும்புவதில்லை" என்பதாகக் கூறியிருந்தார். எஸ்.பி.எம். தேர்வில் முற்றிலுமாக தோல்வி அடைந்த மாணவர்களை தொழிற்பள்ளிகளுக்கு  பள்ளியிலிருந்தே அவர்களை அங்கே அனுப்பி கல்வியைத் தொடர வைக்கலாம். 

கல்வி என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியம்.  இந்திய சமூகத்தில் சீக்கியர் சிறுபான்மையினர் தான் ஆனால் அனைவர்களும் கல்வி கற்றவர்கள். குஜாராத்தியர்கள் சிறுபான்மையர்கள் தான்  ஆனால் அனைவரும் கல்வி கற்றவர்கள். நாம் பெரும்பான்மை சமூகம். நாமும் கல்வி கற்பதில் முனைப்பு காட்டுவோம். நூறு விழுக்காடு படித்தவர்களாக இருப்போம்!

அதற்கு அரசின் ஒத்துழைப்பையும் எதிர்பாக்கிறோம்!

No comments:

Post a Comment