ஒரு நண்பர் சொன்னார் "பேங் ராக்யாட் வங்கியில் இந்திய உணவகங்களுக்குக் கடன் கிடைக்க வேண்டுமென்றால் அவை ஹலால் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்" என்றார் அவர்.
ஆனால் அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வேறு ஒரு கதையைச் சொல்கிறார். "ஹலால் சான்றிதழ் தேவையில்லை" என்கிறார்!
அமைச்சர் அவர்கள் ஒன்றைத் தெளிவு படுத்த வேண்டும். சான்றிதழ் வேண்டுமா வேண்டாமா என்பதைத் தெளிவு படுத்த வேண்டும். வெறும் எளிய மொழியில் சொன்னால் போதும்.
ஆளுக்கு ஒரு பக்கம் அதைப்பற்றி பேசி எது உண்மை என்று தெரியாத நிலையில் தேவையற்ற சர்ச்சைகள் வேண்டாம். உண்மை என்னவென்று தெரிந்து கொண்டால் வேண்டும் என்பவர்கள் அந்த வங்கியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வேண்டாம் என்றால் கைகழுவி விடலாம். இது ஒன்றும் உலக மகா விஷயமில்லை. நமக்கு ஒரு தெளிவு வேண்டும். அதனை அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும். அது தான் நமது குறிக்கோள்
வர்த்தகக்கடன் கொடுக்கும் நிறுவனங்கள் ஒரு சில நிபந்தனைகளை வைத்திருக்கத்தான் செய்வார்கள். யாருக்குக் கிடைக்கும் யாருக்குக் கிடைக்காது என்கிற தெளிவு வாடிக்கையாளர்களுக்கு இருந்தால் கடன் தேவையா இல்லையா என்று அவர்களே முடிவு செய்து கொள்வார்கள். ஆனால் நாம் சொல்ல வருவதெல்லாம் சும்மா அலங்காரமாக பேசுவதம் அதன் பின்னர் பல்டி அடிப்பதும் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.
வளரும் சிறு குறு நிறுவனங்கள் தங்கள் தொழிலை வளர்க்க கடன் என்பது முக்கியத் தேவை. நமது நாட்டில் இந்திய வர்த்தகர்களுக்குக் கடன் கொடுப்பதில் ஏகப்பட்ட கெடுபிடிகள் உண்டு. அதையெல்லாம் மீறித்தான் வர்த்தகர்கள் வளர வேண்டியுள்ளது.
இந்த விஷயத்தில் டத்தோ ரமணன் அவர்கள் கொஞ்சம் தெளிவு படுத்த வேண்டுமென்பது தான் நமது வேண்டுகோள்.
No comments:
Post a Comment