இன்றைய இளைஞர்களுக்கு நேரம் பற்றி கவலையுமில்லை அது போல தவறாமை பற்றி அக்கறையும் இல்லை!
ஒரு மனிதனின் முன்னேற்றம் என்பது அவன் நேரங்காலத்தோடு தனது பணிகளைச் செய்ய வேண்டும். நேரத்தை வீணடிக்காமல் ஒழுக்கத்தோடு தனது கடமைகளை மறவாமல் மதிக்க வேண்டும். அனைத்துக்கும் ஓர் ஒழுஙுகுமுறை வேண்டும். ஒழுங்கற்ற முறையில் எனது பணிகளைச் செய்தால் அனைத்தும் ஒழுங்கற்றுப் போகும் என்கிற எண்ணம் மனதில் இருத்த வேண்டும்.
நமக்கு நல்லதோர் எடுத்துக் காட்டு என்றால் அது சூரியன் தான். சூரியன் தனது கடமைகளில் தவறியதில்லை. குறித்த நேரத்தில் சூரியனைப் பார்க்கிறோம். என்றாவது தனது கடமையில் தவறியதாக சரித்திரமே இல்லை.
நேரந்தவறியதால் வேலையிலிருந்து பலர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். வேலைக்குச் சரியான நேரத்தில் போக முடியததால் வேலை இழந்தவர் பலர். நேரம் தவறினால் அதனால் ஏற்படுவது பெரும் இழப்பு நமக்குத்தான்.
நான் ஒரு சில இளைஞர்களைப் பார்த்திருக்கிறேன். நிறுவனங்களுக்கு நேர்காணலுக்காகப் போகும் போது அவர்கள் படும் அவஸ்த்தை நமக்கே கஷ்டத்தை ஏற்படுத்தும். அப்போது தான் அவர்கள் சான்றிதழ்களை நகல் எடுத்துக் கொண்டிருப்பார்கள்! எல்லாம் அவசரம்! அவசரம்! இன்னொன்றும் அவர்களிடம் உண்டு. "எங்கே வேலை கிடைக்குப் போகிறது" என்கிற எண்ணத்தோடு தான் நேர்காணலுக்கே போவார்கள்! இப்படிக் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக செல்லும் போது நேரத்தை தவற விடுகின்றனர். அத்தோடு வேலையையும் தவற விடுகின்றனர்.
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் நேரத்தின் மீது கண்ணாய் இருப்பவர்கள். அவர்கள் நேரத்தை அலட்சியப்படுவதில்லை. பள்ளிப்பிள்ளைகளுக்குத் தினசரி பட்டியல் போட்டு எந்த நேரத்தில் எதைப் படிக்க வேண்டும் என்றெல்லாம் ஏன் செய்கிறோம்? நேரத்தோடு எதனையும் செய்ய வேண்டும் என்பது தான் நோக்கம்.
நேரத்தை வீணடிக்காதீர்கள். கடைப்பிடியுங்கள். கரை சேருங்கள்.
No comments:
Post a Comment