Saturday 16 December 2017
அடுத்த பிரதமர் துங்கு மக்கோத்தா?
சமீப காலங்களில் மலேசிய மக்களை மிகவும் கவர்ந்தவர்களாக ஜொகூர் அரச குடும்பத்தினர் விளங்குகின்றனர். துங்கு மக்கோத்தா, துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் அவர்கள் ஜொகூர் மக்களின் இதயம் கவர்ந்தவராக வலம் வருகிறார். ஜொகூர் மாநிலத்தில் அவர் செய்து வருகின்ற மாற்றங்கள், துணிச்சலாக அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் மக்களைக் கவர்கின்றன என்பதில் ஐயமில்லை.
வருகின்ற பொதுத் தேர்தலில் ஜொகூர் மாநிலத்தில் யார் வெற்றி பெறுவார் என்பதில் கருத்துக்கள் மாறுபடுகின்றன. ஆளும் கட்சியா அல்லது எதிர்கட்சியா என்பதை இப்போது நம்மால் கணிக்க முடியவில்லை. ஆனால் துங்கு மக்கோத்தாவின் செல்வாக்கை வைத்தே வருகின்ற பொதுத்தேர்தல் முடிவுகள் இருக்கும் என்பது மட்டும் உறுதி.
சிங்கப்புரின் சிந்தனையாளர் மையம், இசியாஸ்-யூசோப் இஷாப் கல்வி நிலையம் நடத்திய ஆய்வொன்றில் ஜொகூர் மக்கள் ஆளுங்கட்சியா - எதிர்க்கட்சியா யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இன்னும் சரியான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை என்பதாகக் கூறுகிறது. அவர்கள் துங்கு இஸ்மாயில் என்ன முடிவு எடுக்கிறாரோ அவர்களே வெற்றி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. துங்கு இஸ்மாயில் நாட்டின் பிரதமராக வருவது நாட்டை சரியான வழியில் கொண்டு செல்வார் என்பது தான் முக்களின் முடிவு.
பொதுவாக ஜொகூர் சுல்தான் அல்லது துங்கு இஸ்மாயில் இருவருமே ஜொகூர் மக்களின் மனங்கவர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். என்ன சொல்லுகிறார்களோ அதனைச் செய்கிறார்கள். குறிப்பாக சமயம், மொழிப்பிரச்சனைகளில் சரியான வழிகாட்டியாக இருக்கிறார்கள்.
துங்கு இஸ்மாயில் நாட்டின் பிரதமராக வருவது என்பது மக்களுக்கு நல்லதொரு செய்தியாக இருக்கும். இது நடக்குமா அல்லது சாத்தியமா என்பதெல்லாம் நம்மால் யோசித்துப் பார்க்க முடியவில்லை. ஆனால் ஜொகூரில் அவர் நினைக்கின்ற மாற்றங்களை அவர் செய்வார் என எதிர்பார்க்கலாம்.
ஜொகூர் அரச குடும்பத்தினரை வாழ்த்துகிறோம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment