Friday 20 April 2018

மைபிபிபி வேளியேறுமா...?


கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியை தனக்குக் கொடுக்காவிட்டால் பாரிசானிலிருந்து  வெளியேறுவோம் என்று மைபிபிபி கட்சியின் தலைவர் கேவியெஸ் அச்சுறுத்துவதாக வெளிவந்த செய்தி எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும்? 

பொதுவாக கேவியெஸ் பேசுகின்ற பேச்சுக்களை யாரும் சட்டை செய்வதில்லை என்பது பொதுவான அபிப்பிராயம். அவர் மோதுவதெல்லாம் ம.இ.கா. வினரிடம் மட்டுமே! அல்லது ம.சீ.ச, வாக இருக்கலாம். மற்றபடி அம்னோவிடம் மோதுகிற அளவுக்கு அவருக்குத் துணிச்சல் கிடையாது!  

கேமரன் மலையில் கடந்த நான்காண்டுகளாக தான் சேவையாற்றி  வருவதாக அவர் கூறுகிறார். சேவை என்பது மலாய்க்காரர்களுக்கு மட்டும் அல்ல. அனைவருக்கும் அவர் செய்ய வேண்டும். இந்தியர்கள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகளை விற்பதற்குப் பல தடங்கல்களை எதிர் நோக்கி வருகின்றனர். பல முறை இது பற்றி பத்திரிக்கைகளில் செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால் அந்தப் பிரச்சனைகளுக்கு இவரால் என்ன செய்ய முடிந்தது? இவரால் ஒன்றும் செய்ய முடியாது! காரணம் அவர்களுடைய பிரச்சனைகளுக்கு இவரால் தீர்வு காண முடியாது. பிரச்சனைகளை உருவாக்குபவர்களே அவருடைய ஆளுங்கட்சியினர்கள் தாம்!

கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் என்ன செய்தார்? வெளி மாநிலங்களிலிருந்து வாக்காளர்களைக் கொண்டு வந்தார்! சம்பந்தம் இல்லாதவர்களை  எல்லாம் கேமரன் மலை தொகுதியில் வாக்காளர்களாகப் பதிய வைத்தார்! இங்கு மட்டும் அவருக்கு இந்தியர்கள் தேவை.  சேவை என்னும் போது இந்தியர்கள் தேவை இல்லை! இது தான் கேவியெஸ்ஸின் தேர்தல் கொள்கை!

சரி, அவருடைய அச்சுறுத்தல் எங்கு போய் முடியும்?  அவருக்குத் தேவை எல்லாம் ஒரு பதவி. ஒரு முழு அமைச்சராக வேண்டும்.  இது தான் அவருடைய கனவு! அதைத்தான் அச்சுறுத்தல்  மூலம் சாதிக்க விரும்புகிறார். நிச்சயமாக அவர் பாரிசானை விட்டு வெளியேற வாய்ப்பில்லை!

அவருடைய பேச்சுக்களை எல்லாம் நாம் கடுமையாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை! அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு! அவ்வளவு தான்!

No comments:

Post a Comment