Sunday 1 April 2018

கேரளாவில் சாதி பெயர் நீக்க நடவடிக்கை ...!


"மக்கள் மனதில் இருந்து சாதி வெறி ஒழிந்தால் தான் நாடு முன்னேறும். அதனால் விரைவில் கேரள அரசின் விண்ணப்பங்களில் சாதி பெயரை தவிர்ப்பது குறித்து அதிகாரிகளோடு ஆலோசனை செய்யப்படும்" என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

முகநூலில் இன்று காலை படித்த செய்தி. 'ஏப்ரல் ஃபூல்"  செய்தியா என்று தெரியவில்லை! அப்படி இருந்தால் ஏதோ ஒரு  ஜாதி வெறி பிடித்த வெறியன் இந்த ஏப்ரல் 1-ம்  தேதியைப் பயன்படுத்தி மக்களை முட்டாளாக ஆக்கியிருக்கிறான் என்று எடுத்துக்கொள்ள வேண்டியது தான்.

ஆனாலும் இது தேவையான செய்தி என்பதால் இது உண்மையான செய்தியாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நான் விரும்புகிறேன். 

இதனை எழுதிய நண்பர் கிண்டல் அடிக்கிறார் என்பது புரிகிறது. ஆனால் இது உண்மையாகும் செய்தியாகவே  நான் நினைக்கிறேன். நிச்சயமாக, இந்தியாவில் கேரளாவே அதற்கு முன்னுதாரணமாக இருக்கும் எனவும் நான்  நம்புகிறோம். காரணம் உண்டு. இந்த மாநிலத்தில் படித்தவர்கள் அதிகம்.  95% விழுக்காடு மக்கள் கேரளாவில் படித்தவர்கள். அவர்களின் அரசியலில் சாதியப் பிரச்சனைகள் குறைவு. சாதியை வைத்து வாக்குகளை வாங்க முடியாது.

தமிழகம் போன்ற மாநிலங்களில் சாதியை வைத்துத் தான் அரசியலே நடக்கிறது.  வாக்குகள் எல்லாம் சாதியை வைத்தே பேரங்கள் பேசப்படுகின்றன. அதனையே அரசியல்வாதிகளும்  ஊக்குவிக்கிறார்கள். ஆகவே,  மக்கள் சாதியை வெறுத்தாலும் அரசியல் வாதிகள் சாதியை விடுவதாக இல்லை. தமிழ் நாட்டில் சாதியை ஒழிப்பதற்கு கடுமையான தலைமைத்துவம் வேண்டும். கடந்த ஐம்பது ஆண்டுகளாக சாதியை வளர்த்த கட்சிகளால் சாதியை ஒழிக்க முடியாது.

ஆனால்  கேரளாவில் சாதியை வைத்து அரசியல் நடத்த முடியாது. அதனால் தான் கேரள அரசின் விண்ணப்பங்களில் சாதியப் பெயரைத்  தவிர்க்கக் கூடிய  வாய்ப்புக்கள் நிறையவே உண்டு. சாதியப் பெயரைத் தவிர்க்கும் இந்தியாவில் முதல் மாநிலமாக கேரள   விளங்கும் என நாம் எதிர்பாக்கலாம்.

எப்படியோ, நல்லதையே எதிர்பார்ப்போம்!


No comments:

Post a Comment