Tuesday, 24 April 2018
ஆவி வாக்காளர்களா...?
நம் நாட்டிற்குள் வங்களாதேசிகள் என்று காலடி எடுத்து வைத்தார்களோ அன்றே ஆவிகளும் வந்து புகுந்து கொண்டன! ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆவி வாக்காளர்கள் வந்து ஜன நாயக வழியில் கடமை தவறாமல் வாக்களித்து விட்டுச் செல்கின்றனர்!
சென்ற தேர்தலின் போது 40,000 ஆவி வாக்களர்கள் இருப்பதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர்' இம்முறை அவர்கள் எல்லாம் நாட்டின் குடிமக்களாக ஆகியிருப்பார்கள்! அதே சமயத்தில் ஆவி வாக்களர்களும் கூடியிருப்பார்கள்!
இதெல்லாம் நடக்கக்கூடிய சாத்தியமில்லை என்று புறக்கணித்து விட முடியாது. பலவீனப்பட்டுக் கிடக்கும் அரசாங்கம் எதையும் செய்யத் தயாராக இருக்கும்.
ஆமாம், பதவியைக் கௌரவமாக விட்டுக் கொடுக்க யாரும் தயராக இல்லை! மக்கள் விரும்புகிறார்களோ, விரும்பவில்லையோ "நான் பதவியில் இருப்பேன்" என்று அடம் பிடிக்கும் தலைவர்களைத்தான் நாம் பார்க்கிறோம்! "நான் நாட்டுக்கும் ஒன்றும் செய்ய மாட்டேன் ஆனால் எனக்குப் பதவி வேண்டும்" என்று சொல்லுகிறவர்கள் தான் அதிகம்!
என்ன செய்வது? இது தான் ஜனநாயகம்!
வெறும் ஆவி வாக்காளர்கள் என்று சொல்லுவதால் மட்டும் பிரச்சனை முடிந்து விடாது! வாக்கு எண்ணுகின்ற இடத்திலும் பல தில்லுமுல்லுகள்! தெனாகா நேஷனலும் அதன் வேலையைக் காட்டும்! தீடீரென்று மின்வெட்டு வயிற்றைக் கலக்கும்! இந்த வேலைகள் எல்லாம் ஆவி வாக்காளர்களோடு கை கோர்த்து வருபவை! அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரத்திமிரைக் காட்ட எந்த எல்லைக்கும் போவார்கள்!
இவைகளெல்லாம் மீறி தான் வெற்றியை நாம் பார்க்க வேண்டும். பல இடர்கள்! பல தொல்லைகள்! பல தடங்கல்கள்! அத்தோடு ஆவிகள்!
இம்முறை ஆவி வாக்காளர்கள் தேர்தல் நடைபெறும் எல்லைக்குள் தலை வைத்து படுக்கு மாட்டார்கள் என நம்புவோம்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment