Monday 22 August 2022

யாழ்ப்பாணத்திலிருந்து (5)

                                                     

                                                                                - 5 -

அந்த காலத்தில் இருந்த அதிகாரங்கள் எல்லாம் இப்போது அவர்களுக்கு இல்லை. இப்போது எல்லாருமே படித்தவர்களாக இருக்கிறார்கள். அவனவன் பிழைப்பை  அவனவன் பார்த்துக் கொளவது தான் அவனவனுக்கு நல்லது என்கிற நிலை வந்துவிட்டது. அதனால் பிறர் விஷயத்தில் தலையீடு என்பது  எல்லாம் பழைய கதை.

என்னிடம் எப்போதுமே ஒரு கருத்து உண்டு. தேவாலயங்களில்  பாதிரியார்களைப் பற்றி நமக்கு ஓரளவு  தெரியும்.. அந்தப் பாதிரியர்கள் தமிழர்களாக இருந்தால் அவர்களிடம் எப்போதுமே ஒரு பெருந்தன்மை உண்டு. அவர்கள் பொதுவான மனிதர்களாகவே நடந்து கொள்வார்கள். ஆனால் அவர்களே ஒர் யாழ்ப்பாணத் தமிழராக இருந்தால் அவர்களை மாற்றவே முடியாது. அவர்கள் மட்டும் அவர்களுடைய இனத்திற்குத் தான் சார்பாக நடந்து கொள்வார்கள். அவர்களை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.

எனது தந்தையார் சொன்ன ஒரு நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது. ஆங்கிலப் பள்ளிகளில் அந்தக் காலத்தில் அதுவும் தோட்டப்பாட்டளிகளின் பிள்ளைகளைச்  சேர்ப்பது என்பது சிரமமான ஒரு விஷயம். அதற்காக எனது தந்தையார் பாதிரியாரிடம் சென்று சிபாரிசு கடிதம் கேட்டார். அவர் யாழ்ப்பாணத் தமிழர். அவர் சொன்ன பதில்: "நீ தோட்டத் தொழிலாளி. உளி பிடித்து பால் மரம் வெட்டுபவன். உன் மகன் பேனா பிடித்து எழுத வேண்டும் என்று ஆசைப்படலாமா?" என்று கேட்டு சிபாரிசு கடிதம் கொடுக்க மறுத்துவிட்டார். அதன் பின்னர் எனது தந்தை அந்த பள்ளியில் அலுவலகராக பணிபுரிந்த ஒரு யாழ்ப்பாணத் தமிழருக்கு,  மாடு ஒன்றை விற்று, அவருக்கு இலஞ்சம் கொடுத்ததாக என்னிடம் கூறியிருக்கிறார்.

அந்த ஒரு பாதிரியாரை வைத்து நான் இதனைக் கூறவில்லை. இப்போதும் அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு நல்ல விஷயம். அவர்களின் எண்ணிக்கை இப்போது குறைந்துவிட்டது.. இல்லை என்றே சொல்லலாம்.  இன்றும்  இந்தியத் தமிழர் மீதான வன்மம் அவர்களுக்குக்  குறைந்ததாகத் தெரியவில்லை! நாம் அடிமைகளாக வாழ்வதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்!

இப்போதும் அவர்கள் பல நல்ல பதவிகளில் இருக்கத்தான் செய்கிறார்கள்.  பிரச்சனைகள் வருகின்ற போது உதவ வேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் அவர்களுக்கு வருவதில்லை. இது இந்தியத் தமிழனின் பிரச்சனை என்பதாகத்தான் அவர்கள் பிரிந்து நிற்கிறார்கள்.

அவர்கள் விரும்புகிறார்களோ விரும்பவில்லையோ இரு சாரார்களுக்கிடையே வளர்ச்சி என்பது என்னவோ இரு பக்கமும் உயர்ந்துவிட்டது. அன்று அவர்களுக்குக் கிடைத்த  மாலை மரியாதைகள்  எல்லாம் இப்போது கிடைக்க வாய்ப்பில்லை.

அடுத்து: கடைசிப்பகுதி

No comments:

Post a Comment