Thursday 18 August 2022

யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள்!


 "அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வந்தவர்கள்" என்கிற தலைப்பில் சமீபத்தில் ஒரு புத்தகம்  ஆங்கிலத்தில் வெளியீடு கண்டிருக்கிறது.

புத்தகத்தை இன்னும் படிக்கவில்லை.

யாழப்பாணத் தமிழர்களின் முன்னேற்றத்தைப்பற்றி நம்மால் ஓரளவு யூகிக்க முடியும். அவர்கள் மலேயா நாட்டிற்குள் அடியெடுத்து  வைத்த போதே  கல்வியோடு வந்தவர்கள். ஆங்கிலமும் தமிழும் கற்றுத் தேர்ந்தவர்களாகவே பெரும்பாலும் இருந்தனர்.

"ஏழைகளின் ஆயுதம் கல்வி" என்பார்கள். அவர்கள் ஏழைகளாகத்தான் வந்தார்கள். அவர்களிடம் கல்வி இருந்ததால் அவர்கள் முன்னேற்றம் சீராக  அமைந்ததில் வியப்பேதும் இல்லை. 

அவர்களிடம் இருந்த கல்வி வெகுவாக அவர்களை உயர்த்திவிட்டது. ஆரம்ப காலங்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள், மருத்துவமனை செவிலியர்கள்,  தோட்ட சிப்பந்திகள், அரசாங்க அலுவலகர்கள் - இப்படி  எல்லாத் துறைகளிலும் அவர்களின் ஆக்கிரமிப்பு  அடங்கியிருந்தது.

ஒரு சமூகம் படித்திருந்தால் அவர்களின் முன்னேற்றம்  எப்படி அமையும் என்பதற்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் சரியான உதாரணம்.

இன்றைய நிலையில் அவர்கள் படித்தவர்கள் என்பதைவிட இன்னொருபடி மேலே போய்விட்டார்கள். அனைவரும் பட்டதாரிகள் அதுவும் வெளிநாட்டுப் பட்டதாரிகள். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியியளார்கள், தொழிலதிபர்கள் - இப்படி அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டனர். பலர் வெளிநாடுகள் சென்று குடியேறிவிட்டனர். அங்கு அரசியலிலும் மிளிர்கின்றனர்.

சுமார் எழுபது எண்பது ஆண்டுகளில் அவர்களின் முன்னேற்றம் என்பது வெறும் கல்வியை வைத்து மட்டும் தான் அமைந்திருக்கிறது. வேறு மந்திரம் தந்திரம் எதுவுமில்லை. கல்வி மட்டும் தான் மந்திரம் தந்திரம்!

தொழில் அதிபர்கள் என்கிற போது யார் நம் கண்முன்னே நிற்கிறார்கள்? மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்கிறார்களே  ஆனந்தகிருஷ்ணன் - அவர் தான்  யாழ்ப்பாணத் தமிழர்களில்  உலகின் பணக்காரர்களின் ஒருவராக வலம் அவ்ருகிறார். இன்னொருவர் கப்பல்களை ஓட்டும் யாழ்ப்பாணத் தமிழரான ஞானலிங்கம் நமக்கு மிகவும் அறிமுகமானவராக இருக்கிறார். இருவருமே மலேசிய யாழ்ப்பாணத் தமிழர்கள்.

மலேசிய அரசியலிலும் அவர்களின் பங்கு அளப்பரியது. சீனிவாசகம் சகோதரர்களை யாரும் மறக்க இயலாது. கிரிமினல் வழக்கறிஞர்கள். அவர்கள் காலத்தில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்தவர்கள்.

இப்படி இன்னும் பல துறைகளில் பெயர் போட்டவர்கள் மலேசிய யாழ்ப்பாணத் தமிழர்கள்.

இன்னும் வரும்..


No comments:

Post a Comment