வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது நம்மிடையே புழக்கத்தில் உள்ள ஒரு பழமொழி. மிகவும் அனுபவமிக்க பழமொழி.
சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் நமது பெரியவர்கள். நெதர்லாந்து நாட்டில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி இது.
பேக்கரி கடை ஒன்றில் ஒரு திருடன் புகுந்துவிட்டான். மிக எளிதாக கொள்ளையடித்து விடலாம். அங்கு இருப்பது ஒரு பெண் தானே என்று சாதாரணமாக நினைத்து கடையினுள் புகுந்து தனது 'வேலை'யை ஆரம்பித்துவிட்டான்.
அப்போது கண்ணாடிகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்த அந்த கடையின் முதலாளியான பெண்மணி ஒரு கணம் ஆட்டம் கண்டு தான் போனார்! ஒரு நிமிடத்தில் சுதாகரித்துக் கொண்ட அவர் கையில் வைத்திருந்த, துடைத்துக் கொண்டிருந்த துண்டை, ஆயுதமாகப் பயன்படுத்தி அந்த திருடனைத் தாக்க ஆரம்பித்தார். அவன் முகத்திலேயே அடி அடி என்று அடிக்க ஆரம்பித்தார்!
இங்கே நாம் கவனிக்க வேண்டியது அந்தப் பெண்மணி கையில் வைத்திருந்த அந்தத் துண்டு நன்றாக தூசி படிந்திருந்தது. அத்தோடு மருந்தும் கலந்து தூண்டு கனமாகவும் ஒருவித வாடையும் வீசிக் கொண்டிருந்தது! அந்தத் துண்டால் அவனை அடித்தபோது அவனால் நாற்றத்தையும் தாங்க முடியவில்லை! அடியையும் தாங்க முடியவில்லை. துண்டும் கனத்து இருந்ததால் நல்ல செம அடி வேறு! அது போதும் அவனை விரட்டி அடிப்பதற்கு! துண்டைக் காணோம்! துணியைக் காணோம்! என்று ஓட ஆரம்பித்தான்!
புல்லும் ஒர் ஆயுதம் என்று நாம் சொன்னோம். இந்தப் பெண்மணியோ ஓர் அழுக்குத் துண்டும் ஆயுதம் தான் என்று நிருபித்து விட்டார்!
ஒரு நிமிடம் அந்தப் பெண்மணி திகைத்துப் போய் நின்று விட்டிருந்தால் அல்லது பயந்து போயிருந்தால் திருடன் அவனது காரியத்தைச் சாதித்திருப்பான்! இருந்த பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு ஒடியிருப்பான்! ஒரு பெண் தானே என்று அலட்சியுமாக உள்ளே வந்தவன் கடைசியில் அடிவாங்கிக் கொண்டு வெளியே ஓடினான்!
எந்தப் பெண்ணும் தனது பணம் கொள்ளையடிக்கப்படும்போது பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை ஒரு சோம்பேறி கொள்ளையடிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கவா முடியும்?
ஒரு சோம்பேறிக்கு நல்ல பாடம்! அந்தத் தாய் நீண்ட நாள் வாழ வேண்டும்!
No comments:
Post a Comment