Friday, 3 June 2016
கேள்வி - பதில்;(16)
கேள்வி
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் 60-ம் ஆண்டு மணிவிழாவை விமர்சையாகக் கொண்டாடப் போகின்றார்களாமே!
பதில்
ஆமாம்! மணிமன்றத்துக்கு நமது வாழ்த்துக்கள். 60 ஆண்டுகள் ஒர் இயக்கம் தொடர்ந்து நமது நாட்டில் தனது சேவைகளைச் செய்ய முடிகின்றது என்றால் அது சாதாராண விஷயம் அல்ல.
கலை, இலக்கியம், பண்பாடு, மொழி, இனம் சார்ந்த ஒர் இயக்கம் தொடர்ந்து தனது நோக்கங்களை முன் நிறுத்தி வெற்றிகரமாகச் செயல்படுவதற்கு நமது வாழ்த்துக்கள்.
ஆனாலும் மணிமன்றம் சமீபகாலமாக எந்த ஒரு ஆரவாரமுமில்லாமல் அமைதியாக, அமிழ்ந்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் உண்மை! இந்த மணிவிழா தமிழ் இளைஞர் மணிமன்றத்திற்கு ஒர் உந்துசக்தியாகத் திகழ்ந்து, வருகின்ற ஆண்டுகளில் தனது கலை, இலக்கிய, பண்பாட்டு, மொழி சார்ந்த நிகழ்ச்சிகளில் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதே நமது ஆவல். குறிப்பாக மொழி சார்ந்த பிரச்சனைகளில் 'பட்டும், படாமலும்' இருப்பது ஏற்புடையதல்ல!
ஒரு காலக் கட்டத்தில் பினாங்கு தமிழ் இளைஞர் மணிமன்றம் "முல்லை" என்னும் கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தியதை நான் அறிவேன். நானும் அதன் வாசகனாக இருந்திருக்கிறேன். அங்கிருந்தே நிறைய எழுத்தாளர்கள் உருவானார்கள் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும்.
ஆனாலும் அது போன்ற முயற்சிகள் இப்போது உள்ளனவா என்பது தெரியவில்லை. இலக்கிய முயற்சிகள் தொடர வேண்டும்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக இன்னும் ஆக்ககரமாக மணிமன்றம் செயல்பட வேண்டும் என்பதே நமது ஆசை.
மீண்டும் மணிவிழா வாழ்த்துக்கள்!.
Labels:
கல்கண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment