Sunday 26 June 2016

கேள்வி-பதில் (20)


கேள்வி

பகாங் மாநில முப்தி, டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் ஒஸ்மான் "மத நம்பிக்கையற்றவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள்" என்று கூறியிருக்கிறாரே! சரி தானா?

பதில்

சரி என்பதனால் தான் அவர் கூறுகிறார் என்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்! ஒரு பக்கம் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் பயமுறுத்தல். இஸ்லாம் அல்லாதவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று ஐ.எஸ். ஸினர் பயமுறுத்துகின்றனர்.  இன்னொரு பக்கம் மதவாதிகளின் அச்சுறுத்தல்.  பொதுவாக மதவாதிகள் - நாட்டில் உலகில் - மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று இந்த உலக மக்களுக்காகவே பிரார்த்திப்பவர்கள்.

அப்படிப் பிரார்த்தனைச் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

நமது பகாங் மாநில முப்தி சுகபோக வாழ்க்கை வாழ்பவர். அவர் எட்ட முடியாத இடத்தில் இருக்கிறார். அவருடைய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதனால் தனக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை  என்பது அவருக்குத் தெரியும். அதனால் தைரியமாகப் பேசுகிறார்! அதுவும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சவால் விட்டிருக்கும் இந்த நேரத்தில் இவரும் அவர்களோடு சேர்ந்து இப்படி கூறுவது இதுவும் ஒரு சவாலாகவே நமக்குத் தோன்றுகிறது!

ஆக, மலேசிய இஸ்லாம் அல்லாத மலேசியர்கள்  வெளி நாட்டிலிருந்தும், உள் நாட்டிலிருந்தும் இரு சவால்களை எதிர்நோக்குகின்றனர் என்பது தெளிவு. பகாங் மாநில முப்தி அப்படி ஒரு நிலையை ஏற்படுத்திவிட்டார் என்று தான் நாம் சொல்ல வேண்டி உள்ளது.

இந்த நேரத்தில் முப்தி அவர்களின் கவனத்திற்கு ஒன்றை நாம் கொண்டு வருகின்றோம். மத நம்பிக்கையற்றவர்களால் எந்த நாடும் எந்தப் பிரச்சனைகளையும் எதிர்நோக்கவில்லை! அவர்களால் எந்த அச்சுறுத்தலும் இல்லை! எந்த பயமுறுத்தலும் இல்லை! அவர்களிடன் எந்தத் தீவிரவாதமும் இல்லை!

இன்று நடக்கின்ற அட்டுழியங்கள், அக்கப்போர்கள் அனைத்தும் எல்லா மததித்தினராலும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய - கட்டாயச் சட்டமாக்கப்பட்டு விட்டது! வன்முறை, தீவிரவாதம் அனைத்தும் மதவாதிகளே வளர்த்து விடுகின்றனர்!

இந்த நேரத்தில் நாம் சொல்ல வருவதெல்லாம்: தீவிரவாதம் ஒடுக்கப்பட வேண்டும்! ஒழிக்கப்பட வேண்டும்! அதனை வளரவிடுவது அனைத்துத் தரப்பினருக்கும் எந்த நலனும் ஏற்படப்போவதில்லை!

வாழ்க மலேசியா! வளர்க மலேசியா! வெல்க மலேசியா!


1 comment:

  1. he should be booked under law and order crimes hate speech and sedition.. and due punishment given to him..he is a terrorist..

    ReplyDelete