Saturday 25 June 2016

கேள்வி-பதில் (19)


கேள்வி

"உங்களுக்குத்  துணிவு இருந்தால் மலேசியாவுக்கு வந்து பாருங்கள்!"  என்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கதிற்கு, போலிஸ் படைத் தலைவர், டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் சவால் விட்டிருக்கிறாரே!


பதில்

டான்ஸ்ரீ காலிட் அபு பக்காரின் துணிச்சலை நாம் பாராட்டுகிறோம். அப்படியென்றால் நமது நாட்டின் பாதுகாப்பு சிறப்பாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை!  நாம் பயப்படும் அளவுக்கு எதுவும் நடந்துவிடப் போவதில்லை!

நமது நாடு எல்லாக் காலங்களிலும் அமைதியான ஒரு நாடாக விளங்கி வந்திருக்கிறது. அதற்கு ஒரே காரணம் பொதுவாக மலேசியர்கள் அமைதி விரும்பிகள். எந்த ஒரு கலவரமோ, ஆர்ப்பாட்டமோ , குண்டு வீச்சு தாக்குதல்கள் போன்றவகைகளுக்கு  இ ங்கு இடமில்லை!

ஆனாலும் சமீப காலங்களில் சமய தீவிரவாதிகளால் ஆங்காங்கே சில அசாம்பவிதங்கள்  நடைபெற்றிருக்கக் கூடும்.  அவர்கள் மேல் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகள்  எடுத்தும் வருகின்றனர்.

நமது ஐ.ஜி.பி. "துணிவு இருந்தால் மலேசியாவுக்கு வாருங்கள்"  என்கிறார். அவர்கள் இங்கு வராமலேயே  பலவிதமான அச்சுறுத்தல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். உண்மை தான்! ஆனால் இங்கு தங்கு தடையின்றி வங்காளதேசிகளையும், பாக்கிஸ்தானியர்களையும் நாம் நமது நாட்டில் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் அனைவரும் இங்கு வேலைக்காக வந்தவர்கள் தான் என்றாலும் இவர்கள் அனைவருமே இங்கு வேலைச் செய்கிறார்களா ஏன்று சொல்லுவதற்கு எந்தப் புள்ளிவிபரமும் நம்மிடம் இல்லை!  வேலை செய்யாதவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர்.

தங்களது தாய் நாடுகளிலிருந்து பல ஆயிரங்களைச் செலவு செய்து இங்கு வந்தவர்கள் - வருமானம் இல்லாத நிலையில் - இது போன்ற தீவிரவாத கும்பல்களினால் மிக எளிதாக ஈர்க்கப்படுவார்கள் என்பதையும் மறைப்பதற்கில்லை! நாம் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை! ஆனாலும் ஐ.ஜி.பி. இவர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

இதனை நாம் கவனத்திற்குக் கொண்டு வரக்காரணம் இவர்களின் பின்னணி  தீவிரவாதப் பின்னணி என்பது நம்மைவிட ஐ.ஜி.பி. நன்கு அறிவார்!

நமது நாடு எல்லாக்காலங்களிலும் அமைதியின் நாடாகவே தொடர்ந்து திகழ வேண்டும்!  அதுவே நமது அனைவரின் ஆசை!

வாழ்க மலேசிய! வெல்க மலேசிய!


1 comment:

  1. economic disparity and communal/social disharmony are the essential factors(roots and Routes) to the incidents..birth, growth and dominance of fundamental fanatics...all of us everywhere heed to vigilant and active to create social harmony and social justice for all continuously..

    ReplyDelete