Friday 24 June 2016

கேள்வி-பதில் (18)


கேள்வி

மலேசிய குற்றக் கண்காணிப்பு அமைப்பின் (அரசு சாரா அமைப்பு) தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீசஞ்சீவன் கைது செய்யப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லையே!


பதில்

உண்மையே! ஆனாலும் எதுவும் சொல்வதற்கில்லை!

பல ஊழல்களை அம்பலத்திற்குக் கொண்டு வந்தவர் சஞ்சீவன். காவல்துறையினர்  அவரைக் கண்காணித்துக் கொண்டும், பின் தொடர்ந்து  கொண்டும் வந்ததாக அவரே பல முறை புகார் கூறியிருக்கிறார்.

காவல்துறையினரால் கண்காணித்துக் கொண்டும், பின் தொடர்ந்து கொண்டும் இருக்கும் ஒரு நபர் எப்படி இதையெல்லாம் செய்ய முடியும் - செய்வாரா -  என்று நம்மால் நம்ப முடியவில்லை தான்!

ஒரு சூதாட்ட மைய உரிமையாளரிடம் பாதுகாப்புப் பணம் கேட்டு மிரட்டுவதும், அந்த உரிமையாளர்  தனது குடும்பத்தின் பாதுகாப்புக் கருதி காவல்துறையினரிடம் புகார் கொடுப்பதும் - ஒன்றுமே புரியவில்லை! - அந்த அளவுக்குப் பலம் வாய்ந்தவரா அல்லது அந்த அளவுக்குச் செல்வாக்கு உள்ளவரா சஞ்சீவன்? இன்னும் பல புகார்கள் அவர் மேல் சுமத்தப் பட்டிருக்கின்றன!

ஒரிரு வாரங்களூக்கு முன்னர் தான் அவர் தங்கியிருந்த தங்கும் விடுதியில் அவரைக் கண்ணிவைத்துப் பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது! அவரின் பக்கத்து அறையில் ஒரு பெண் போலிஸ் இன்ஸ்பெக்டர் தங்கியிருந்தார். ஆனால் அவர் அவரின் அறையில் இருந்தார்! இவர் இவரின் அறையில் இருந்தார்! அதனால் ஒன்றும் செய்யமுடியவில்லை!

ஆனால் ஒன்று மனதை நெருடுகிறது. அவருடைய கார் ஓட்டுனர் ஓர் இந்தியப் பிரஜை. அவரிடம் காலாவதியான வேலைபெர்மிட் இருந்ததாகக் கூறப்படுகிறது.  வேலை செய்ய அனுமதி இல்லாத ஒருவரை வேலைக்கு அமர்த்தியிருப்பது சட்டப்படி குற்றம்  ஒரு பிரபலமான மனிதர் எப்படி இந்த அளவுக்கு அலட்சியமாக இருக்க முடியும்?  

இருந்தாலும் நாம் எதையும் ஊகிக்க வேண்டாம். சட்டம் தனது கடமையைச் செய்யட்டும். நாடறிந்த வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ அவருக்காக வாதாடுகிறார்.

நல்லதே நடக்கட்டும்!


1 comment:

  1. usually governments use false build up to harass good activists..a good lawyer can easily pierce through smoke screens...think of Susan story in prophet Daniel's life,God help..

    ReplyDelete