Monday 27 June 2016

உயர்ந்த இனத்தின் உன்னதப் பெயர்கள்!


"உயர்ந்த இனத்தின் உன்னதத் தமிழை எழுதவது எப்படி?"என்னும் கட்டுரையை நான் படிக்க நேர்ந்தது. எழுதியவர்: வழக்கறிஞர் பொன்முகம் பொன்னன் அவர்கள்

அதிலும் குறிப்பாக என்னைக் கவர்ந்தது பிள்ளைகளுக்கு எப்படி பெயரிடுவது என்பது மீதான பகுதி தான்.


இப்போது நமது பிள்ளைகளின் பெயர்களைப் பார்க்கும் போது என்ன நினைத்து, எப்படி நினைத்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கிறார்களோ என்பது  நமக்குப் புரியவில்லை! பெயர்களைப் பார்க்கும் போது இவன் எந்த ஊர்காரன், இவன் என்ன இனம் என்று ஒன்றுமே புரியவில்லை! அவன் தமிழன் என்பதற்கான அடையாளமே அங்கு இல்லை!

முன்பு நாம் நமது தாத்தா பாட்டி அல்லது தெய்வங்களின் பெயர்கள் அல்லது சினிமா நடிகர்களின் பெயர்கள் என்று ஏதோ நமது தமிழர்களின் அடையாளத்தைக் காட்டி வந்தோம். இப்போது அந்தப் பழக்கம் முற்றிலுமாக தொலைந்து போனது!

இது பற்றி ஒரு சில இளம் பெற்றோர்களை நான் விசாரித்துப் பார்த்தேன். அவர்கள் சொன்னதிலிருந்து முதல் குற்றவாளியாக நான் நினைப்பது கோவில் பூசாரிகளைத்தான்! அவர்கள் தான் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். முதல் எழுத்தை அவர்கள் கொடுத்து விடுகிறார்கள். பிறகு பெற்றோர்கள் அந்த எழுத்துக்குத் தகுந்தவாறு பிள்ளைகளுக்குப் பெயர்களை வைக்கிறார்கள். அவர்கள் கொடுக்கின்ற முதல் எழுத்து  இப்படியும் தொடங்கலாம்:  டு, ஷு, ஜு  இப்படி நடைமுறைக்குக் கொஞ்சமும் ஒத்துவராத எழுத்துக்களைக் கொடுத்தால் பெற்றோர்கள் என்ன செய்வார்கள்?  கேட்டால் நாங்கள் ஜாதகத்தைப் பார்த்து கணித்து எழுத்துக்களை எழுதி கொடுக்கிறோம் என்கிறார்கள்!

சரி! போனது போனவைகளாக இருக்கட்டும்! இப்போது "தமிழ் எங்கள் உயிர்" என்னும் அமைப்பு இவைகளை நிவர்த்திச் செய்ய சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதனைப் பலரும் வரவேற்றுள்ளனர். நாமும் இருகரம் கூப்பி வரவேற்போம்!

அதில் முக்கியமாக "தமிழுக்கு நாம் செய்யாமல் வேறு யார் செய்வது"  என்று மலேசிய அர்ச்சகர்கள் சங்கம் களத்தில் குதித்துள்ளது! இவர்களைத்தான் நாம் அதிகமாக எதிர்பார்த்தோம். காரணம் குழந்தைகள் பிறந்ததும் பெற்றோர்கள் முதலில் நாடுவது அர்ச்சர்களைத்தான். அவர்கள் நினைத்தால் இந்தப் பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்! அதிலும் வெறும் பெயரின்  தொடக்க எழுத்தைக் கொடுக்காமல் நல்லதொரு பெயர் பட்டியிலைத் தயார் செய்து பெற்றோர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

அத்தோடு இந்த நேரத்தில் "தமிழ் எங்கள் உயிர்: அமைப்பு மேற்கொண்டிருக்கும் - தமிழ் தமிழர் சம்பந்தப்பட்ட - எல்லா  முயற்சிகளிலும்
வெற்றிபெற நமது வாழ்த்துகள்!  

தமிழன் தலை நிமிர வேண்டும்! வாழ்க தமிழினம்!

1 comment: