கல்வியில் எனது நீண்ட பயணம் என்றால் அது சிரம்பானில் உள்ள செயிண்ட் போல் பள்ளி தான். முதல் ஆறு ஆண்டுகள் காலை நேரம் பின்னர் மூன்று ஆண்டுகள் மாலை நேரப்பள்ளி. காலை நேரப்பள்ளியில் திறமையற்ற என்னைப்போன்ற மாணவர்களை மாலை நேரத்தில் தள்ளி விட்டார்கள்.
ஒன்றை நான் சொல்லியாக வேண்டும். நான் திறமையற்ற மாணவன் என்று சொல்லிவிட முடியாது. எந்த ஒரு வழிகாட்டியும் இல்லை. கடைசிவரையிலும் இல்லை. ஏதோ பள்ளிக்குப் போனோம் வந்தோம். என்னத்தையோ படித்தோம். அவ்வளவு தான். ஆசிரியர்களிடம் கேட்க தைரியம் இல்லை. ஆங்கிலம் வராது. ஆசிரியர்கள் அனைவருமே சீனர்கள்.
உண்மையில் மாலை நேரப்பள்ளி ஒரு வராப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். காலை நேரத்தில் சிலோனீஸ் மாணவர்கள் மற்றும் மலையாள மாணவர்கள் - இவர்கள் எல்லாம் நம்மைப் பார்த்தாலே ஆகாது. என்னுடைய சூழலில் உள்ள மாணவர்கள் யாரும் இல்லை. அதனால் சீன மாணவர்கள் தான் நண்பர்கள். அவர்களும் என்னைபோன்ற புத்திசாலிகள்!
மாலை நேரப்பள்ளியில் இந்திய மாணவர்கள், மலாய் மாணவர்கள், சீன மாணவர்கள் எல்லாம் ஒரு கலப்பு. . அப்போது தான் பேசக்கூடிய தைரியமே வந்தது. நாலு பேரோடு பேசுகின்ற துணிவும் வந்தது. ஆனால் பரிதாபம். கல்விக்கு அது உதவவில்லை. எப்படியோ சீனியர் கேம்ப்ரிட்ஜ் பரிட்சை எழுதும் அளவுக்குப் போய்விட்டேன். வெற்றி பெறவில்லை.
நான் செண்டாயான் தோட்டத்தில் தான் எனது கல்வியை ஆரம்பித்தேன். ஆனால் ஆச்சரியம் என்னைத்தவிர வேறு மாணவர்கள் யாரும் என்னோடு படித்ததில்லை. நான் அங்கிருந்த மூன்று ஆண்டுகளில் நான் ஒருவனாகத்தான் தனி ஆளாக போய் வந்துகொண்டிருந்தேன். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் சேர்ந்து படிக்க உதவியாக இருந்திருக்கும் அல்லவா?
அறிவோம்: அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை எப்போது தனது வண்ணத்தை மாற்றியது? 1814 - ம்- ஆண்டு இங்கிலாந்துக்கும் அமரிக்காவுக்கும் கடும் போர் நடந்தது. அந்த நேரத்தில் அமரிக்க அதிபரின் மாளிகை - பல வண்ணங்களோடு இருந்த மாளிகையை - நெருப்பு வைத்து எரித்தனர் இங்கிலாந்து படையினர். எரித்த பாகங்களை மறைக்க வெள்ளையடித்து மறைத்தனர் அமெரிக்கர்கள். ஆக, இன்றுவரை, வெள்ளையடித்த மாளிகை, வெள்ளை மாளிகை (White House) யாகவே தொடர்கிறது.
வரலாற்று ஆசிரியர் மன்னர் மன்னன்
No comments:
Post a Comment