Saturday, 1 February 2025

பாராட்டுகிறோம்!


 பிரதமர் அன்வார் அவர்கள் பல நாடுகளுக்குச் சென்று  அங்குள்ள முதலீட்டார்களைச் சந்தித்து அவர்களை ஈர்த்து முதலீடுகளை நாட்டுக்குக்  கொண்டுவருவது  பாராட்டுக்குரியது என்பதில் ஐயமில்லை.  ஒப்பந்தம் போட்டுவிட்டால் அனைத்தும் வந்துவிடும்  என்று பொருளல்ல. ஒரு சில வரலாம் ஒரு சில வராமல் போகலாம். வந்தால் நல்லது வராவிட்டால் கைநழுவி போய்விட்டது! அவ்வளவுதான்!

ஆனால் இதனாலெல்லாம்  சராசரி மலேசியர்களுக்கு என்ன இலாபம்? இதுபற்றியெல்லாம் அவர்களுக்கு  எநதக் கவலையுமில்லை. மக்களைப் பொறுத்தவரை அன்றாடப் பிரச்சனை தான் அவர்கள் முன் இருப்பது. முதலீடுகள் வரும்வரை காத்திருந்தால்  அவனும் அவனது குடும்பமும் பட்டினியோடு  சாக வேண்டியதுதான். அவனுடைய தேவையெல்லாம் அவனுடைய அனுதின உணவு அவன் மேஜைக்கு வரவேண்டும்.  அப்போது தான்  அவன் உயிரோடு வாழ முடியும்.

இன்றைய விலைவாசி ஏற்றம்  அவன் கழுத்தை நெரிக்கிறது. பொருள்களின் விலை குறைந்தபாடில்லை.  புதிய முதலீடுகள் வந்தால் என்ன வராவிட்டால் என்ன?  அது எப்போதோ வரும். இன்றைய பிரச்சனையை எப்படி தீர்ப்பது? 

இதோ இந்த மாதத்திலிருந்து சம்பளம் கூடும் என்கிறார்கள்.  அதற்குச் சமமாக  பொருள்களின் விலையும் ஏறிவிடும். அதற்காகவே வியாபாரிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்! என்னத்தைக் கூட்டி என்னத்தைச் செய்ய! ஒரு பக்கம் ஏற்றினால் இன்னொரு பக்கமும் ஏறிவிடுகிறது!

இந்தச் சூழலில் பிரதமரைப் பாராட்டுகிறோம். அவருடைய கடமையை அவர் செய்கிறார். அவரைக் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை.  அரசாங்கப் பணியாளர்களும் தங்களது கடமையைச் செய்ய வேண்டும். அதற்கும் பிரதமர் தான் பொறுப்பு.

பிரதமரைப் பாராட்டுகிறோம்!

No comments:

Post a Comment