Sunday, 2 February 2025

சம்பளம் உயருகிறது!

இந்த மாதத்திலிருந்து தனியார் துறைகளில் சம்பளம் கூடுகிறது  என்பது தற்போதைக்கு நல்ல செய்தியாகத்தான் தோன்றுகிறது. 

சிக்கனமாக வாழத் தெரிந்தவர்கள் எல்லாச் சூழலிலும் தங்களைத் தயார் படுத்திக் கொள்வார்கள். மிச்சம் பிடிக்கவும் செய்வார்கள்.  ஆனால்  வியாபாரிகள் சும்மா இருப்பார்களா?  அவர்கள் ஒரு பக்கம் விலைகளைக் கூட்டத்தான் செய்வார்கள். அது அவர்களின் இயல்பு. 

வியாபாரிகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்பது தெரியவில்லை. காரணம் சம்பளம் கூடும்போதெல்லாம்  விலைகளும் ஏற்றங்காணும். இது ஒன்றும் புதிதல்ல.  பின் நோக்கிப் பார்த்தால் அது புரியும்.

அநேகமாக உணவுகளின்  விலை ஏற்றம்  எந்தக்காலத்திலும்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலுமா என்பது தெரியவில்லை.  அதுவும் குறிப்பாக குழந்தைகளின் பால்மாவுகளின் விலை ஏற்றத்தைத் தடுப்பது, கடந்தகால அனுபவத்தின்படி,  மிகவும் கடினம் தான். குழந்தைகளின் பால்மாவு ஏற்றத்தையும் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.

வியாபாரிகள், விலை ஏற வேண்டும் என்பதற்காக  ஒரு சில பொருள்களைப்  பதுக்கும் வேலைகளில் ஈடுபடுவார்கள். இது எப்போதும் நடப்பது தான்.  அங்கும் இலஞ்சம் முக்கியமான காரணியாக விளங்குவதால்   முன்பு இப்படி நடந்தது.  ஆனால்  அரசாங்கம் இப்போது கொஞ்சம்  எச்சரிக்கையாய் இருப்பதால்  தவிர்க்க முடியும் என  நம்புகிறோம்.

எந்தச் சூழலிலும்  பணம் என்று வரும் போது அலட்சியமாக இருந்து விடாதீர்கள். சேமிப்பு, காப்புறுதி இவைகள் எல்லாம் தேவையே.   அலட்சியமாக இருந்தால் பணமும்   உங்களை உதாசீனம் செய்துவிடும்

சம்பள உயர்வை வரவேற்கிறோம்!

No comments:

Post a Comment