Monday, 14 May 2018
டாக்டர் மைக்கல் தேவராஜ்...!
கடந்த பொதுத் தேர்தலில் நான் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்தவர்களில் ஒருவர் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பி.எஸ்.எம். கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜ்.
பொதுவாக அவரைப்பற்றியான ஒரு நல்ல அபிப்பிராயம் மக்களிடையே இருந்தது. அவர் நல்ல சேவையாளர் என்பதாக பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவரது மருத்துவ சேவையின் மூலம் அனைவருக்கும் மருத்துவத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறார். அவர் மூலம் பழங்குடி மக்களும் பயன் அடைந்திருக்கிறார்கள்.
நல்ல சேவையாளர் தோற்றுவிட்டாரே என்று நினைக்கும் போது நமக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.
ஆனாலும் ஒரு கருத்தை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். இது வரை நடந்த தேர்தல் நடைமுறைகள் வேறு. இந்த முறை நடந்தது முற்றிலும் வேறு. இந்த முறை போட்டி என்பது கட்சிகளுக்கு இடையே அல்ல. ஒரே ஓரு கோடு தான். டாக்டர் மகாதிர்- நஜிப் இவர்கள் இருவர் மட்டும் தான்.
இவர்கள் இருவரை வைத்துத் தான் தேர்தலே நடந்தது. ஆக இந்த முறை தேர்தல் நடைமுறையே மாறிவிட்டது. ஒன்று அவர் அல்லது இவர். அவரா இவரா மக்களே நீங்களே தேர்ந்தெடுங்கள் என்கிற பாணியில் தேர்தல் நடைபெற்றது. இது நமது நாட்டிற்கு புது பாணியிலான தேர்தல். ஒரு மாற்றத்திற்காக மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் டாக்டர் மகாதிர் தான் வெற்றிபெற வேண்டும் என மக்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். அதனால் தான் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தோற்றுப் போனார்.
அவரது தோல்வி நமக்கு வருத்தமே. ஆனால் மகாதிரின் கூட்டணீ வெற்றிப் பெற்றதில் நமக்கு மகிழ்ச்சியே!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment