மித்ரா, இந்திய சமூக உருமாற்றத் திட்டத்தின் கீழ் நமது இளைஞர்களுக்காக பல பயிற்சி திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது.
ஒன்றுமே இல்லாமல், எந்தவொரு பயிற்சியும் இல்லாமல், எந்தவொரு வேலையும் இல்லாமல், நாங்கள் சிறைக்குப் போயே ஆவோம் என்று அடம் பிடிக்காமல் ஏதோ ஒரு பயிற்சியைக் கற்றுக் கொண்டு நல்ல, கௌரவமாக பிழைப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருப்பது தான் பிரதமர் துறையின் கீழ் இயங்கும் இந்திய சமூக உருமாற்றுப் பிரிவான மித்ரா அமைப்பு.
இப்போது அவர்கள் பல பயிற்சிகளை இந்திய இளைஞர்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நாமே தேடிப்போய் தான் அந்தப் பயிற்சிகளைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். வீடைத் தேடி ஒன்றும் வராது. முயற்சி என்பது நம்முடையதாக இருக்க வேண்டும்.
இதைப் படிக்கும் இளைஞர்கள் இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள மித்ராவின் அகப்பக்கத்துக்குப் போனால் இன்னும் விரிவாக பல செய்திகள் கிடைக்கும்.
விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதிக்குள் செய்திட வேண்டும். முதலில் வரும் 150 விண்ணப்பங்களுக்கு மட்டுமே முன்னுரிமைக் கொடுக்கப்படும் என்று மித்ரா கூறுகிறது.
வாருங்கள் இளைஞர்களே! வரலாறு படைப்போம்!
No comments:
Post a Comment