மித்ராவின் தலைவர் டத்தோ ரமணின் அறிவிப்பை நாம் மனம் திறந்து வரவேற்கிறோம்.
பொதுவாகப் பார்க்கும் போது இந்த முறை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். இந்த முறை என்றில்லாமல் வருங்காலங்களிலும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது இந்திய சமுதாயத்தின் தேவை. அதற்கு மித்ரா அமைப்பு கைக் கொடுக்கும் என நம்பலாம்.
கல்வி கற்பவருக்குப் பண உதவி என்பது தேவையாக இருக்கலாம். அது மித்ராவுக்கு, பணத்தை வெளியாக்குவதில் , எளிமையான வழி என்பதும் உண்மை. அதனை நாம் குறை சொல்ல ஒன்றுமில்லை என்று சொன்னாலும் வேறு சில துறைகளை மித்ரா மறந்துவிடக் கூடாது.
இந்தியர் பொருளாதாரம் பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். உதவிகள் மறுக்கப்படுகின்றன என்று கூக்குரல் இடுகிறோம். அந்தப் பிரச்சனையை எப்படி அணுகுவது என்பதற்கான வழிமுறைகள் கூட நம்மிடம் இல்லை
சரி, அது பற்றி நாம் காலங்காலமாகப் பேசி ந்மக்கு எந்த வழியும் தெரியவில்லை. இன்னும் தடுமாற்றம் இருக்கத்தான் செய்கிறது.
நமக்குத் தெரிந்த ஒரு வழியைக் காதில் போட்டு வைப்போம். நடுத்தரத் தொழிலில் உள்ளவர்கள், சிறு,குறு தொழிலில் உள்ளவர்கள் இன்னும் அதற்குக் கீழே போனால் தள்ளு வண்டுகளில் சிறிய வியாபாரங்களில் உள்ளவர்கள் இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் உதவி பெற தகுதியுள்ளவர்கள் தான்.
ஆனால் இங்கு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் என்றால் தள்ளு வண்டிகளில், சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார்களில், சிறு லோரிகளில் வியாபாராம் செய்பவர்கள் தான். இவர்கள் தான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள். இவர்கள் றான் பொருளாதார ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்.
இவர்களைப் போன்றவர்களைத்தான் மித்ரா அதிகக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்கள் தான் கடனுக்காக மித்ராவின் முன் வாசலில் நிற்பவர்கள்! அவர்களின் தேவை அதிகம். ஆனால் அவர்கள் தேவை எல்லாம் ஒரு சில ஆயிரங்கள் தாம். இலட்சக்கணக்கில் அவர்கள் கடன் கேட்பதில்லை என்பது உண்மை.
இவர்களைத்தான் நாம் சிறிய வியாபாரிகள் என்கிறோம். பண முதலீடு இல்லாமல் ஏதோ ஒரு சிறிய தொகையைக் கொண்டு போராடிக்கொண்டு இருப்பவர்கள். இன்னும் ஓர் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்தால் தங்களது தொழிலை இன்னும் சிறப்பாக, இலாபகரமாகக் கொண்டு செல்ல முடியும் என்னும் நம்பிக்கை உடையவர்கள்>
ஆனால் இப்போது மித்ரா கடைப்பிடிக்கும் நடைமுறைகள் இவர்களுக்கு எந்த வகையிலும் நன்மை பயக்காது. கடன் வாங்க மனு செய்யும் மனுபாரங்கள் பெரும் தொழிலுக்குத்தான் உபயோகமாக இருக்கும். இவர்களுக்கல்ல. பாரங்களை எளிமையாக்குங்கள் என்பதே நமது வேண்டுகோள். தங்களது வியாபாரங்களைப் பதிவு செய்திருந்தால் அவர்களுக்கு நிதி உதவி செய்யுங்கள். வங்கி செய்கின்ற நடைமுறைகளை நீங்களும் பின்பற்றினால் ஆகப்போவது ஒன்றுமில்லை!
புதிய நடைமுறைகளைக் கொண்டு வாருங்கள். எளிதாக்குங்கள். பட்டுவாடா செய்யுங்கள்!
No comments:
Post a Comment