Monday 19 March 2018

கேள்வி - பதில் (76)




கேள்வி

தமிழ் நாட்டில் இனி புதிய கட்சிகள் ஆரம்பிக்கப்படும் போது "திராவிடம்" என்னும் சொல் தவிர்க்கப்படுமா?


பதில்

தவிர்க்கப்படும் என்பதே சமீபத்திய நிகழ்வுகள் காட்டுகின்றன. கமல்ஹாசன் தனது கட்சிக்கு  'மக்கள் நீதி மய்யம்'  என்று வைத்திருக்கிறார். அங்கு திராவிடம் இல்லை. அவர் திராவிடம் என்பதற்கு ஆதரவாளர். டி.டி.தினகரனும்  தனது கட்சிக்கு 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்'  என்று வைத்திருக்கிறார். இவரும் தனது அம்மாவின் திராவிடக் கட்சிக்கு ஆதராவாளர். ஆனால் இருவருமே திராவிடத்தை ஒதுக்கிவிட்டனர்!

அடுத்து ரஜினி தனது கட்சிக்கு 'திராவிடம்' என்னும் பெயர் வைப்பார் என்று தோன்றவில்லை. அவருடைய அரசியல் ஆலோசகரான தமிழருவி மணியன்  திராவிடம் என்னும் சொல்லுக்கே எதிரானவர்! திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று ஓயாமல் கூவிக் கொண்டிருப்பவர்! ரஜினியும் தன்னைத் தமிழன் என்று சொல்லி அடையாளப் படுத்துகிறார். தன்னைத் தமிழன் என்று  சொல்லிக் கொள்ளுபவர் திடீரென திராவிடன் பக்கம் போகமாட்டார் என நம்பலாம்!

இந்தத் திராவிடன் என்னும் சொல்லுக்கு ஏன் இந்த அளவுக்கு வெறுப்பு அல்லது புறக்கணிப்பு? இதற்குக் காரணம் தி.மு.க.வும் அ.தி.மு.க. வும் தான்.  அவர்கள் தமிழ் நாட்டை வெளியாருக்கு விற்று விட்டார்கள் என்று சொல்லலாம். இரு கட்சிகளுக்குமே தலைமை தமிழர்கள் அல்ல! தமிழர்கள் இல்லை என்று சொல்லும் போது அவர்களுக்குத் தமிழ் நாட்டினர் மீதோ அல்லது தமிழர் மீதோ அக்கறை இருக்கும் என்று நம்புவதற்கில்லை. 

தமிழர்களையும் தமிழ் நாட்டையும் பிச்சைக்காரத் தேசமாக மாற்றி விட்டார்கள். தமிழர்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும் பிச்சைக்காக அரசியல்வாதிகளிடம் கையேந்துகிறார்கள்! குடிக்கும் தண்ணீர் இப்போது போத்தல்களில் விற்கப்படுகின்றன! அந்த அளவுக்கு ஒரு வளமையான தேசத்தைப் பாலைவனமாக மாற்றி விட்டார்கள்!

இது தான் இந்தத் திராவிடக் கட்சிகள் தமிழ் நாட்டிற்குக் கொண்ட வந்த வளர்ச்சி! இனி இந்தத் திராவிடக்கட்ச்சிகள் தமிழ் நாட்டிற்குத் தேவை இல்லை என்பது தான் இன்றைய நிலை! ஆனாலும் தமிழ் நாட்டு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் அனைத்தும் இந்தத் திராவிடக் கட்ச்சிகளை வைத்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன! காரணம் அவை பெரும்பாலும் தமிழர்களுக்கு எதிரானப் போக்குக் கொண்ட தமிழர் அல்லாதார் நடத்துகின்ற பத்திரிக்கைகள், ஊடகங்கள்!

இனி திராவிடம் தமிழர்களுக்கு வேண்டாம்! திராவிடக் கட்சிகளும் வேண்டாம்! தமிழர்களாகவே வாழ்வோம்! தமிழர்களாகவே சாவோம்! இதில் என்ன திராவிடம் வேண்டிக் கிடக்கு!

தமிழ் நாடு தமிழர்களுக்கே!

No comments:

Post a Comment