Sunday 18 March 2018

நமது ஆம்புலன்ஸ் சேவைகள்...!


அபத்து, அவசர வேளைகளில்  நமது ஆம்புலன்ஸ் சேவைகள் எப்படி இயங்குகின்றன?

எல்லா அரசாங்க சேவைகளைப் போல ஆம்புலன்ஸ் சேவைகளும் நொண்டிச் சேவைகள் தாம்!

மருத்துவமனைகளோ, மாவட்டம் தோரும் இயங்கும் சிகிச்சையகங்களோ, எதுவாக இருந்தாலும் எதுவுமே சரியாக, திருப்திகரமாக இயங்கவில்லை என்பது  அனைவரும் அறிந்தது தான்.

சமீபத்தில் கார் ஒன்றினால் மோதி ஒரு மாணவி உயிரிழந்தார். சமபவம் நடந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. இதுநடந்தது சிரம்பான் அருகே மந்தின் என்னும் ஒரு சிறிய பட்டணத்தில். உடனடியாக ஆம்பலன்ஸ் அழைக்கப்பட்டும் ஆம்பலன்ஸ் வரவில்லை.  ஆம்புலன்ஸ் உடனடியாக வந்திருந்தால் அவர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

அந்த மாணவியின் உயிர்  பிரிந்த  பிறகு    கிடைத்த தகவல்களின் படி மந்தின் சிகிச்சையகத்தில் கடந்த ஒரு மாத காலமாக  ஆம்புலன்ஸ் சேவை இல்லையாம்.  காரணம் ஆம்புலன்ஸ் வண்டி பழுதாகிப் போனதாம்! இதுவெல்லாம் ஒரு காரணம் என்று சொல்லும் போது நம்மைப் போன்ற  பொது 
மக்களுக்கு எவ்வளவு கேவலமாக  அவர்களைப் பற்றி நினைப்போம் என்று சொல்லத் தேவையில்லை.  

வண்டி பழுதாகிப் போனால் அதனைப் பழுதுப் பார்க்க மந்தினில் கடைகளே கிடையாதா? அதையும் விடுங்கள்.  அருகிலே இருக்கும் சிரம்பான் நகரில் எல்லா வசதிகளும் உள்ள ஒரு நகராயிற்றே, அங்கே சென்று பழுது பார்த்திருக்கலாமே. இப்போது யார் மேல் நாம் குற்றம் சொல்லுவோம்? நிச்சயமாக அந்தச் சிகிச்சையகத்தின் தலைவர் யாரோ அவர் தான் குற்றவாளி. சரி, நாம் விரும்பும் மாதிரி எல்லாம் செய்ய முடியாது என்று சொன்னாலும் அதனை எப்படிக் கையாளுவது என்று தெரிந்து தானே இருக்க வேண்டும். 

ஆனால் இங்கு நடந்தது என்னவென்றால் பழுதடைந்து போன அந்த அம்புலன்ஸ் வாகனத்தை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தான் நாம் கவனிக்க வேண்டியது. சரி, வண்டி ஓடவில்லை. அந்த வண்டி ஓட்டுநர் என்ன ஆனார்? கடந்த ஒரு மாதமாக அவருக்கு வேலை இல்லையா?  அவருக்குச் சம்பளம் கொடுக்கப்படவில்லையா என்பது தான் முக்கியம். சம்பளம் கொடுக்காமல் இருக்க முடியுமா? அது முடியாது தானே! சும்மா வண்டியைப் போட்டுவிட்டு அது எப்படி அவருக்குத் தெண்டச்  சம்பளம் கொடுக்க முடியும்? வண்டி ஓடவில்லை என்றால் அவருக்கு ஏன் சம்பளம் கொடுக்க வேண்டும்?  ஒரு மாதம் ஓடவில்லை என்றால் அந்த வண்டியில் எஞ்சின் பாகங்கள் இருக்கின்றனவா அல்லது அதுவும் 'காணாமல்' போய் விட்டவனவா!

இப்படித் தான் நமக்குக் கேள்விகள் கேட்கத் தோன்றுகிறது!  ஆனால் எதைச் சொல்லி என்ன ஆகப் போகிறது. போன உயிர் போனது தான். அது மீண்டும் வரப்போவதில்லை. அரசாங்கத்தில் பணி புரிபவர்களுக்கு  இப்படி வண்டிகள் கெட்டுப் போனால் அதனைப் பழுதுப் பார்க்க வேண்டும் என்னும் அக்கறை இல்லை. மனித உயிர்கள் மிகவும் கேவலாமக்கப்பட்டு விட்டது.

இதனைத் தீர்த்து வைக்க தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றால்  இது தொடரும் என நம்பலாம்!

No comments:

Post a Comment